world

img

கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க 187 நாடுகள் ஆதரவு அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு

நியூயார்க், நவ.2- கியூபா மீதான அமெ ரிக்காவின் சட்டவிரோத பொருளாதார தடைகளை நீக்க ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மா னத்திற்கு 187 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலை யில் அமெரிக்கா, இஸ்ரேல்   ஆகிய நாடுகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.உக்ரைன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள சட்டவிரோத பொருளாதாரத்  தடைகளை நீக்குவதற்கு ஐநா பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரும் போதெல் லாம் அதற்கு பெரும் ்பான்மை ஆதரவு கிடைத்தா லும் அமெரிக்கா அதை நிரா கரித்து விட்டு சட்ட விரோத பொருளாதாரத் தடைகளை தொடரும். 

தற்போது 31 ஆவது ஆண்டாக ஐநா பொதுச்  சபையில் கியூபா மீதான 60 ஆண்டுகால கொடூரமான மற்றும் சட்டவிரோத தடை களை முடிவுக்கு கொண்டு வர, கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை  187 நாடுகள் ஆதரவாக வாக்களித்த நிலையில்   இஸ்ரேலும் தீர் மானத்திற்கு எதிராக வாக்க ளித்தன. உக்ரைன்  வாக்க ளிப்பில் கலந்து கொள்ள வில்லை.  

பொருளாதாரத் தடை மூலம்  உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக் குறையை உருவாக்கி கியூப மக்களுக்கு  பெரும்  நெருக் கடியை அமெரிக்கா ஏற் படுத்தி வருவதை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கண்டித்தனர். 

இத்தகைய “பொருளா தாரத் தாக்கம் கியூபா மக்க ளுக்கு மேலும்  அதிக  தீங்கு விளைவிக்கும்” என்று ஐநாவிற்கான காபோனின் தூதர் ஆரேலி ஃப்ளோர் கும்பா பாம்போ கூறினார். மேலும் இந்த  முற்றுகை “தெளிவாக பிராந்தியத் திற்கும் கண்டங்களின்  ஒற்றுமைக்கும் விரோதமான செயல்” என்றும்  அவர் தெரிவித்தார்.

தீர்மானத்தின்  வெற்றி யை அறிவித்த கியூபா வெளி யுறவுத் துறை அமைச்சர்  புருனோ ரோட்ரிக்ஸ், “சட்ட விரோத, தவறான மற்றும் தார்மீக ரீதியாக நீடிக்க முடி யாத கொள்கையின் காரண மாக அமெரிக்கா முழுவது மாக  தனிமைப்படுத்தப் படுவதை உறுதிப்படுத்து கிறது” என்றும்  தெரி வித்தார்.