காசாவில் நோய்த் தொற்று தடுக்கப் போராடும் ஐ.நா.
காசாவில் நோய்த் தொற்றுக்களை தடுக்கப் போராடி வருவதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா. நிவாரணம் மற்றும் பணி நிறு வனம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப நிலை, அதிக நெரிசல், தண்ணீர்ப் பற்றாக்குறை, உடலை சுத்தம் செய்வ தற்கான சோப்பு, கிருமிநாசினிகள் பற்றாக்குறை காரணமாக காசாவில் தோல் நோய்த்தொற்றுகள், பாக்டீரியா தொற்றுகள் அதிகரித்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.
பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மீண்டும் கொ ரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. ஜூலை 17 அன்று நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியானதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு தடுப்பூசி போட வும் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் இதனால் அரசு நடவடிக்கைகள் பாதிக்கப்படாது எனவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
ஓமன் கப்பல் விபத்து
9 பேர் மீட்பு
ஓமன் கடலில் எண்ணெய்க் கப்பல் கவிழ்ந்த விபத்தில் ஒன்பது பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மரண மடைந்த ஒருவரின் உடல் மீட்கப் பட்டுள்ளது.13 இந்தியர்களும் இலங்கையை சேர்ந்த 3 பேரும் அந்த கப்பலில் இருந்தனர். மீட்புப் பணியில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் டெக் மற்றும் கண்காணிப்பு விமானம் பி-8 ஈடுபட்டுள்ளன. ஜூலை 15 அன்று ஓமனின் டுக்ம் துறைமுகத்துக்கு அருகே கப்பல் கவிழ்ந்தது குறிப்பி டத்தக்கது.