world

img

இஸ்ரேலியர்கள் கொல்லப்படுவதாக பைடன் முதலைக் கண்ணீர்

டெல் அவி, அக்.18- காசா மருத்துவமனையில் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் இஸ்ரேல்  குண்டு வீச்சில் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலியர்கள் கொல்லப் படுவதாக ஜோ பைடன் முதலைக்கண்ணீர் வடித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வை திட்டமிட்டபடி அக்டோபர் 18 புதன் கிழமையன்று சந்தித்தார். டெல் அவிவ் வில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இஸ்ரேலுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் அமெரிக்கா வழங்கும் என அவர் உறுதியளித்தார்.  பாலஸ்தீன மக்கள்  மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தீவிர மடைந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் இஸ்ரேல் பிரதமர் மற்றும் ஜோர்டான் மன்னரை சந்திக்க திட்ட மிடப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளி யுறவுத்  துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்திருந்தார்.இந்நிலை யில் செவ்வாய் இரவு காசாவின் அல்-அஹின் மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டு வீசி பெரும் போர்க்குற்றத்தை அரங்கேற்றியது.இந்நிலையில் ஜோர்டான் அரசு பைடன் உடனான சந்திப்பை ரத்து செய்தது.  முன்னதாக பெஞ்சமின் நேதன்யாகு  உடனான சந்திப்பில் காசா மருத்துவமனை மீதான குண்டு வீச்சை பற்றிப்  பேசிய பைடன் தனது வருத்தத்தை தெரி வித்தார். மேலும் அது இஸ்ரேலால் நடத்தப்பட வில்லை, என்றும் ஹமாஸின் பெயரை குறிப்பிடாமல் மற்றவர்களால் நடத்தப் பட்டிருக்கலாம் இஸ்ரேல் அல்ல என்றும் இஸ் ரேலுக்கு ஆதரவாக கருத்து கூறினார்.  ஹமாஸ் அமைப்பின்  தாக்குதலில் உயிரிழந்த 1300க்கும் மேற்பட்ட மக்களில் 32 அமெரிக்கர்களும் உள்ளனர்; இஸ்ரே லியர்களை கொலை செய்வதில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளை விட   ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் மிக மோசமானது என்று பைடன் கூறினார். மேலும் இஸ்ரேலுக்கு வந்ததை பெருமையாகக் கருதும் அதே வேளை யில், “அப்பாவிகள் மற்றும் போருக்கு  இடையில் சிக்கியுள்ள  பாலஸ்தீனர் களுக்கு உதவியை  உறுதிப்படுத்த  ‘நேதன்யாகுவை ஊக்குவிப்ப தாகவும்; இஸ்ரேல் மக்களின் தைரியம், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்க ளின் துணிச்சல் பிரமிக்க வைக்கிறது” என்றும்  பைடன் கூறிக்கொண்டார்.

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக யூதர்கள் 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு தினங்களுக்கு முன் எங்களின் பெயரில் கொலை செய்யாதீர்கள்  (NOT IN OUR NAMES) என கோஷங்களோடு போர் நிறுத்தப்பட வேண்டும் என்று  யூதர்கள் போராட்டம் நடத்தினர். போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அரசு முன்வந்து இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையில் சுமூகமான தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.