இஸ்ரேல் ராணுவம் பாலஸ் தீனத்தின் காசா மீது போர் அறி வித்து 10 நாட்களாக முன்னறி விப்பின்றி குண்டுகளை வீசி நடத்தும் தாக்கு தலில் 15 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 8 பத்திரிகை யாளர்கள் மிக மோசமான முறையில் காய முற்றும்,3 பத்திரிகையாளர்கள் காணாமலும் போயுள்ளனர். கொலைசெய்யப்பட்ட பத்திரிகை யாளர்களில் 11 பேர்கள் பாலஸ்தீனத்தையும்,3 பேர்கள் இஸ்ரேலையும் ஒருவர் லெபனான் நாட்டையும் சார்ந்தவர். காசாவை தொடர்ந்து தற்போது லெபனான் மீதும் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தி வருகிறது. அங்கும் பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டுள்ளனர். முன்னறிவிப்பு இன்றி மருத்துவ மனைகள், பாலஸ்தீன மக்களின் வீடுகள், வழிபாட்டுத்தலங்கள் என அனைத்துப் பகுதிகளி லும் இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான மக்களையும் குழந்தை களையும் கொலை செய்து வருகிறது. ஆனால் இஸ்ரேலின் நெருங்கிய மேற்குலக நாடுகள் இவற்றை மறைத்து போலிப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றன. காசாவில் உள்ள பத்திரிகையாளர்கள் அங்கு நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக உலக மக்களிடையே கொண்டு சென்றனர். இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடவடிக்கை களை உலகத்தின்முன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர்.
அக்டோபர் 7
செய்திப் பிரிவில் ஆசிரியராகப் பணியாற்றிய ஷாய் ரெகேவ், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலின் போது காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில் அக்டோபர் 7 அன்று உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது. போரின் முதல் நாளன்று இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் குழுவின் தாக்கு தல்கள் குறித்து செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த போது இஸ்ரேல் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனின் 22 வயதான பத்திரிகையாளர் அய்லெட் அர்னின் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இஸ்ரேலின் ஹீப்ரு மொழி செய்தித்தாளான ‘இஸ்ரேல் ஹயோம் தின சரியில் ‘பணியாற்றிய இஸ்ரேலிய புகைப்படக் கலைஞர் சோஹர் மற்றும் அவரது மனைவி இரு மகள்களுடன் தெற்கு இஸ்ரேலின் கிபுட்ஸ் நஹல் ஓஸில் நடந்த ராணுவ மோதலில் கொல்லப்பட்டார். இந்த தகவலை இஸ்ரேல் ஹயோம் பத்திரிகை அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது. ஃபோர்த் அத்தாரிட்டி என்ற செய்தி நிறுவன புகைப்படப் பத்திரிகையாளரான முகமது அல்-சால்ஹி, காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்கு அருகே குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனத்தின் அதி காரப்பூர்வ செய்தி நிறுவனமான வஃபா மற்றும் பத்திரிகையாளர் ஆதரவுக் குழு (JSC) தெரி வித்துள்ளது.
ஸ்மார்ட் மீடியாவின் பத்திரிகையாளரான முகமது ஜார்கோன், தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபா நகரின் கிழக்கே நடந்த இஸ்ரேலின் தாக்குதல்களை பதிவு செய்யும் போது இஸ்ரேலின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டார் என பாலஸ்தீன சுதந்திர பத்திரிகை குழு மற்றும் பத்திரிகையாளர் ஆதரவுக் குழுவினர் உறுதிப்படுத்தினர். ஐன் மீடியாவின் புகைப்படக் கலைஞரான இப்ராஹிம் முகமது லாஃபி, காசா பகுதியின் ஈரெஸ் கிராஸிங்கில் இஸ்ரேலுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அக்டோபர் 8
சுதந்திர ஊடகவியலாளரான அசாத் ஷம்லாக் மற்றும் அவரது 9 குடும்ப உறுப்பினர்களும் இஸ்ரேலின் வான்வெளி ஏவுகணை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர். தெற்கு காசா பகுதியில் உள்ள ஷேக் இஜ்லினில் அவர்கள் வசித்து வந்தனர்.
அக்டோபர் 9
செய்தி நிறுவனங்கள் மீதான நேரடி தாக்குதல் மேற்கு காசாவின் ரிமால் மாவட்டத்தில் ஹிஜி என்ற கட்டிடத்தில் பல செய்தி நிறுவனங்கள் இயங்கி வந்தன.இந்த கட்டி டத்தின் மீது குறிவைத்து இஸ்ரேலின் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அல்-கம்சா இணையதள செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் அல்-தவீல் கொலை செய்யப்பட்டார்.மேலும் இந்த தாக்குதலில் “கபார்” செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் முகமது சோப்,பத்திரிகையாளர் ஹிஷாம் அல்ன்வாஜா ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர்.
அக்டோபர் 11
முகமது ஃபயஸ் அபு மதார் என்ற சுதந்திர ஊடகவியலாளர் தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபா நகரில் செய்தி சேகரித்து வந்த போது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் கொல்லப்பட்டார்.
அக்டோபர் 12
வடக்கு காசா பகுதியில் அமைந்துள்ள ஜபாலியாவில் வசித்து வந்த சௌத் அல்-அஸ்ரா என்ற வானொலி பத்திரிகையாளர் அகமது ஷெஹாப் வீட்டில் இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியது. இதில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் என அனைவரும் உயிரிழந்தனர்.
அக்டோபர் 13
பாலஸ்தீன ஊடக சபையின் பெண் பத்திரிகையாளர்கள் அமைப்பின் தலை வரும் சுதந்திர ஊடகவியலாளருமான சலாம் மீமா அவரது கணவர் மற்றும் மூன்று குழந்தை களுடன் அக்டோபர் 10 அன்று இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொலைசெய்யப் பட்டார். அவரது உடல் மூன்று நாட்களுக்குப் பிறகே இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. ஹமாஸ் குழுவினரின் அல்-அக்ஸா வானொலியின் ஊடகவியலாளர் முபாரக் வடக்கு காசா பகுதியிலும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட செய்தியாளர் இஸ்ஸாம் அப்துல்லா லெபனான் எல்லையிலும் இஸ்ரேலின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டனர். யாரா ஈத் என்ற பாலஸ்தீன பெண் ஊடக வியலாளரின் வீட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று குண்டு வீசியதில் அவரது குடும்ப உறுப்பினர்கள் 15 நபர்கள் படுகொலையா னார்கள் மற்றும் யாரா ஈத் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார். இவர்கள் தவிர்த்து அக்டோபர் 7 முதல் 13 வரை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த அல்-சுடானி, மகேர் நாசே ஆகிய பத்திரிகை யாளர்களும் அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தை சேர்ந்த எலி பிராக்யா, கார்மென் சௌக்கதர் ஆகிய இரு ஊடகவியலாளர்களும் பிரெஞ்சு செய்தி நிறுவனமான பிரான்ஸ்-பிரஸ்ஸின் வீடி யோ பத்திரிகையாளரான டிலான் காலின்ஸ் மற்றும் புகைப்படக் கலைஞர் கிறிஸ்டினா அஸ்ஸி, அல்-காட் சேனலின் நிருபர் இப்ராஹிம் கானான் மற்றும் ஸ்கை நியூஸ் அரேபியா செய்தி நிறுவனத்தின் ஃபிராஸ் லுட்ஃபி மற்றும் அவரது குழுவினர் பலத்த காயமடைந்துள்ள னர். நிடல் அல்-வஹிதி, ஹைதம் அப்தெல் வாஹித் ஆகிய இரு பாலஸ்தீன புகைப்படக் கலைஞர்களும் ரோயி இடன் என்ற இஸ்ரேல் பத்திரிகையாளரும் காணாமல் போயுள்ளனர்.
தொகுப்பு : சேது சிவன்