world

img

“எங்களை மீட்காமல், அரசியல் செய்கிறீர்கள்”

ஹமாஸ் வசம் உள்ள  இஸ்ரேலிய பிணைக்கைதி கள், தங்களை மீட்டு உடனடி யாக  தங்களின் குடும்பத்துடன் சேர்க்க வேண்டும். ஆனால் நீங்கள் எங்களை வைத்து அரசியல் செய்கிறீர்கள் என்று இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் அவர் கள் தெரிவித்துள்ளதாவது: “போரை முடிவுக்கு கொண்டு வந்தால் பிணைக்கைதிகளாக உள்ள எங்களை விடுவிப்ப தாக ஹமாஸ் குழுவினர் கூறி யுள்ளார்கள். நீங்கள் எங் களை விடுவிக்க வேண்டும். 

ஆனால் நீங்கள் அக்டோ பர் 7-லில் இஸ்ரேலின் பாது காப்பு, அரசியல் ஆகியவற் றில் ஏற்பட்ட குழப்பத்திற்கு எங்களை வைத்து அரசியல் செய்கிறீர்கள். அப்பாவி குடி மக்களாகிய நாங்கள் தான் உங்களுக்கு வரி செலுத்து கிறோம்.

எங்களைப் பலியிடுகிறீர்கள்

ஆனால் நீங்கள் எங்களை பலியிடுகிறீர்கள்! எங்கள் அனைவரையும் பலியிட நினைக்கிறீர்கள்! எங்களை கொலை செய்வதற்கான வழி களை நீங்கள் தேடுகிறீர்கள். இதுவரை கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் மரணம் உங்களுக்கு போதவில்லை யா? நீங்கள் உடனடியாக எங்க ளை விடுதலை செய்ய வேண் டும். பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வதன் மூலம் எங்களை விடுதலை செய்ய வேண்டும். இப்போதே எங்களை எங்கள் குடும்பத்திடம் சேர்த்து வையுங்கள்” என மேற்கண்ட வாறு இஸ்ரேலிய பிணைக்கைதி கள்  தங்களின் கோபத்தை கடு மையாக வெளிப்படுத்தி யுள்ளனர்.