world

img

ஜனாதிபதி தேர்தல்: இஸ்ரேலை ஆதரிப்பதால் கருத்துக்கணிப்பில் பின்னடைவை சந்திக்கும் பைடன்

வாஷிங்டன்,பிப்.5-  காசா மீது  மிக கொடூரமாக தாக்குதல் நடத்தி வரும்  இஸ்ரேலை ஆதரிக்கும்  அமெரிக்காவிற்கு  சர்வதேச ஆதரவு குறைந்து வரும் சூழலில் , அமெ ரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை தனிப்பட்ட முறையில் “அவர் மிக மோசமான மனிதன் “ என கடுமை யாக திட்டியதாக பொலிட்டிக்கோ என்ற அரசியல் விமர்சன  செய்தித்தள அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.    ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர்  நேதன் யாகு ஆகியோருக்கு இடையேயான  முரண் பாட்டின் பின்னணியில் தான் இது எழுந்துள்ளது  என  அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச விதிகளை மீறி நேதன்யாகு மத்திய கிழக்கு நாடு களுடன்  நடத்தி வரும் போரில் அமெரிக்கா நேரடி யாக ஈடுபடும்  நிலைக்கு வந்துள்ளது  எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  ஜோர்டானில் அமெரிக்கா ஆக்கிரமித்து அமைத்துள்ள ராணுவத்தளத்தின் மீது பாலஸ்தீன ஆதரவு குழுக்கள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் மரணடைந்தனர்.இதனை தொடர்ந்து சிரியா, இராக் எல்லைகளில் உள்ள பாலஸ்தீன ஆதரவு குழுக்களின் தளங்களின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது.

மேலும் ஹவுதி குழுக்களின் மீதும் தாக்குதலை தீவிரப் படுத்தி வருகிறது.   பொலிட்டிக்கோ அறிக்கையில் குறிப்பிட்டுள் ளதை ஜோ பைடனின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ் இதை  நிராகரித்துள்ளார். ஜோ பைடன் நேதன்யாகுவை விமர்சிக்கும் வகையில் எந்த வார்த்தையையும் பயன்படுத்தவில்லை என மறுத்துள்ளார்

.    போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் பாலஸ்தீனர்கள்  மீதான இனப்படுகொலை நடவ டிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்திக் கொண்டே இருக்கும் நிலையிலும் நேதன் யாகுவிற்கு தனது ஆதரவு நடவடிக்கைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறார்.  இது இந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடை பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில்  10 லட்சம் வாக்கு கள் வரை  பைடன்  இழக்க நேரிடும் எனவும் பொலிட்டிக்கோ குறிப்பிட்டுள்ளது.  

பைடனின் 50 சதவீத   வாக்காளர்கள் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை “ஒரு இனப்படுகொலை” என கருதுவதாக சமீபத்தில் நடைபெற்ற யூகோ கருத்துக்கணிப்பு தெரிவித்த தையும்   பொலிட்டிக்கோ குறிப்பிட்டு இந்த அறிக்கை யை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி இஸ்ரேலின் செயல்பாடுகளும் அதற்கு அமெ ரிக்காவின் தீவிர ஆதரவும்  வரவிருக்கும் அமெ ரிக்க ஜனாதிபதி தேர்தலில் பைடனின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளதை காட்டுகிறது.  சமீபத்தில்  நியூயார்க் டைம்ஸ்-சியானா நடத்திய கருத்துக்கணிப்பில் ,நாட்டின் 18 முதல் 29 வயதுடைய  இளம் வாக்காளர்கள் மத்தியில் குடிய ரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பை விட ஜோ பைடன்  குறைவான வாக்குகளே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 அந்த கருத்துக்கணிப்பில் வாக் காளர்களில் 49 சதவீதம் பேர் குடியரசுக் கட்சியை ஆதரித்துள்ளனர். இது பைடனுக்கு தேர்தலுக்கு முன்பான மிகப்பெரும் பின்னடைவாகும்.  இறுதியாக அமெரிக்காவில்  46 சதவீத வாக்கா ளர்கள் டொனால்டு டிரம்பை தேர்வு செய்வதாகவும், 44 சதவீதம் பேர் ஜோ பைடனை தேர்வு செய்வதாகவும் கருத்துக்கணிப்புகளின் சராசரி காட்டுகிறது.