வன்முறை பூமியாக மாறி வரு கிறது பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம். அதன் உன் னாவ் பகுதிக்கு அருகே உள்ள அதியா ரசூலாபாத் கிராமத்தில் வசிக்கும் லால் பகதூர் என்பவரின் மகன் சஜன் லோதி (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது காதலியை பார்க்கச் சென்றுள்ளார். அதன்பிறகு சஜன் லோதியை காண வில்லை. அதியா ரசூல்பூர் கிராமத்திலி ருந்து இருநூறு மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மா மரத்தில் தூக்கில் சஜன் லோதி சடலமாகத் தொங்கியுள்ளார். வய லுக்குச் சென்ற கிராம மக்கள் சடலத்தை பார்த்து, குடும்பத்தினருக்கு தகவல் தெரி வித்தனர். தகவலறிந்த போலீசார் சட லத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறாய்வு முடி வில் சஜன் லோதி வலது தோள்பட்டை யில் பலத்த காயம் உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸ் விசாரணையில் சஜன் லோதியை அவ ரது காதலியின் குடும்பம் அடித்து, உதைத்து தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்துள் ளது. தலைமறைவாக உள்ள காதலியின் குடும்பத்தினரை போலீசார் தேடி வரு கின்றனர்.