பெர்லின், ஜூன் 27- தங்கள் கிழக்குப் பகுதி உறுப்பு நாடுகளுக்கு பாதுகாப்பு என்ற பெய ரில் லிதுவேனியாவில் 4 ஆயிரம் படை வீரர்களை நிறுத்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணு வக் கூட்டணி முடிவுசெய்திருக்கிறது. லிதுவேனியா, ரஷ்ய எல்லை யில் அமைந்திருக்கிறது. ரஷ்யாவின் அண்டை நாடுகள் மீது அமெரிக்கா வும், அதன் கூட்டாளிகளும் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. உக் ரைனில் நடைபெற்று வரும் போர், தங்களின் பொருளாதாரத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தியபோதும், உக்ரைனுக்கு உதவுவதன் மூலம் போரை நீட்டிக்கவே இந்த நாடுகள் முயற்சிக்கின்றன. மேலும் பல ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் உறுப்பு நாடாக வேண்டும் என்று விண்ணப்பங்களைத் தரச்செய்யும் பணி நடக்கிறது. ரஷ்ய எல்லையில் அமைந்திரு ப்பதால், லிதுவேனியாவில் நேட்டோ படைகளை நிறுத்தப் போகிறார்கள். 4 ஆயிரம் படை வீரர்களை அங்கு நிறுத்துவது திட்டமாகும். இந்தத் திட்டத்தில் தங்கள் நாட்டுப் படை வீரர்களை அங்கு நிறுத்தி வைக்க ஜெர் மனி ஒப்புக் கொண்டிருக்கிறது. அதோடு, இந்த எண்ணிக்கையிலான வீரர்களை அங்கு நிரந்தரமாக தங்க வைக்கும் ஏற்பாடுகளைச் செய்யத் தயார் என்றும் கூறியிருக்கிறார்கள். லிதுவேனியாவில் ஆகும் செலவு களை ஜெர்மனியின் தலைமீது ஏற்றும் பணியை அமெரிக்கா கச்சி தமாகச் செய்து முடித்திருக்கிறது. ஜெர்மனியின் படைகள் நிரந்தர மாகத் தங்கும் என்ற தகவலை லிது வேனியாவின் தலைநகர் வில்னிய சில் ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அறிவித்தார். இது பற்றி செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “லிதுவேனியாவில் வலுவான தொரு நிரந்தரமான படை முகாம் அமைக்கப்படும். இது ஒரு முக்கிய மான பணியாக இருக்கும். இதற் கான கட்டுமானங்களை சிறிது, சிறி தாக அமைக்கும் பணிகள் நடக்கின் றன. இன்னும் சில மாதங்களில் இது நிறைவு பெறும். லிதுவேனியாவின் பாதுகாப்பை ஜெர்மனி உத்தர வாதப்படுத்தும்” என்றார்.
ஜெர்மனியின் இந்த அறி விப்புக்கு லிதுவேனியாவின் ஜனாதி பதி கீதானஸ் நவ்சேதா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “நேட்டோவின் முன்னணி வரிசையில் லிதுவேனியா உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகச்சிறிய இடைவெளி கூட லிது வேனியாவில் இல்லை” என்றார். ஜெர்மனியின் படைகள் முதன்முறை யாக லிதுவேனியாவுக்குள் வர வில்லை. கடந்த ஆறு ஆண்டு களாகவே படைகள் அங்கு நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால் நிரந்தரமான முகாம் என்ற ஏற்பாட்டுக்குள் ஜெர்மனி செல்லவில்லை. தற்போது அமெரிக்காவின் அழுத்தத்தால் நிரந்தர முகாம் அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.
வலையில் விழுகிறார்கள்
கிழக்கு நோக்கிய விரிவாக்கம் தேவையற்ற மோதல்களை உரு வாக்கும் என்று ரஷ்யா தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணியை எச்சரித்து வந்துள்ளது. சோவியத் யூனி யனில் இருந்து பிரிந்து போன நாடு களைக் குறிவைத்து அவர்கள் இயங்கி வருகிறார்கள். உக்ரைன் மற்றும் ஜார்ஜியா ஆகிய இரு நாடுகள்தான் அமெரிக்கா தலைமை யிலான நேட்டோவின் அடுத்த குறி யாக இருக்கிறது. இதன் மூல மாகத் தங்கள் நாட்டை சுற்றி வளைப்பதுதான் இவர்கள் திட்டம் என்று ரஷ்யா சுட்டிக்காட்டி வருகிறது. போலந்து உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தாங்களாகவே அமெரிக்காவின் வலையில் சிக்கிக் கொள்கின்றன. நேட்டோவின் உளவுத்திறன் மற்றும் படைகளைக் கட்டுப்படுத்தும் திறன் ஆகிய வற்றை போலந்து போன்ற நாடு களுக்கும் விரிவடையச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன. உக்ரைன் விவ காரத்தைக் காட்டி இந்த நாடுகளும் உள்நாட்டில் எழும் எதிர்ப்புகளைச் சமாளித்து விட முடியும் என்று நம்பு கின்றன. அமெரிக்காவின் விரி வாக்க எண்ணத்திற்கு இத்தகைய போக்கு உதவுகிறது.