states

img

புலிகளுக்கு விஷம் வைத்து கொலை!

மாதேஸ்வரன் மலை புலிகள் காப்பகத்தில் மாதேஸ்வரன் மலை புலிகள் காப்பகத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 5 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டது உடற்கூராய்வில் உறுதியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை புலிகள் காப்பகத்தில் தாய் புலி மற்றும் 4 குட்டிகள் இறந்த நிலையில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டன. புலிகளின் சடலங்களை கைப்பற்றிய வனத்துறையினர், அவற்றை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வின் முடிவில் 5 புலிகளும் விஷம் வைத்து கொள்ளப்பட்டன என்பது உறுதியாகியுள்ளது. புலிகளுக்கு அருகே இருந்த பசுவின் சடலத்தை பரிசோதித்ததில் அதன் உடலில் விஷம் கலந்திருந்ததாகவும், அது சிவன்னா என்பவரின் பசு எனவும் வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
இதை தொடர்ந்து கல்லேப்போட்டி கிரமத்தைச் சேர்ந்த சிவன்னா உள்பட 6 பேரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.