வெறும் புரளியா? அறிவிப்பிற்கான முன்னோட்டமா?
இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம், நிலத்தடி நீருக்கு வரி
ஜூன் 26 (வியாழக்கிழமை) அன்று மதியம்,”இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் (டோல் கேட்) வசூலிக்கப் படும்” என்று ஒன்றிய மோடி அரசு அறி வித்துள்ளது என செய்திகள் வெளியா கின. இதனையடுத்து,”தேசிய நெடுஞ் சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை” என தேசிய நெடுஞ் சாலை ஆணையம் வியாழக்கிழமை அன்று மாலை விளக்கம் அளித்து போலிச் செய்தி என அறிவித்தது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் பாசனத்திற்கு பயன் படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிப்ப தென ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. நீரை வீணடிப்பதையும், நீலத்தடி நீரை தவறாக பயன்படுத்து வதையும் தடுக்கும் வகையிலேயே இந்த திட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக கூறியிருக்கும் மோடி அரசு, இந்த புதிய திட்டத்தின் கீழ் விவசா யிகள், எந்த அளவுக்கு நீரைப் பயன் படுத்துகிறார்களோ அதற்கேற்ப வரி விதிக்க ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள் ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த அறிவிப்பு விவசாயிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்த 24 மணிநேரத்தில், அதாவது சனிக்கிழமை அன்று நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம், நிலத்தடி நீருக்கு வரி என்ற அறிவிப்புகள் இரண்டும் மிக முக்கிய மான அடிப்படை பிரச்சனைகளை உள்ள டக்கியது. ஆனால் இரண்டையும் மோடி அரசு அறிவித்ததாகக் கூறி, பிறகு போலிச் செய்தி என்று கூறுவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம், நிலத்தடி நீருக்கு வரி என்ற அறிவிப்பு கள் வெறும் புரளியா? அறிவிப்பிற்கான முன்னோட்டமா? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.