போர் ஒருநாள் முடியும்
போர் ஒருநாள் முடிவடையும், தலைவர்கள் கைகுலுக்கிக் கொண்டிருப்பார்கள், கடந்து போன காலம் போல் இறந்து போன உயிர்களின் மேல்.... வயதான தாய் இறந்துபோன மகனுக்காக தன் வாசல்படியில் எண்ணிக்கிடக்கும் நேரத்தோடு காத்திருப்பாள் – ஒவ்வொரு தட்டுக்கும் ஒரு நம்பிக்கை.. காதல் கணவனை நெஞ்சில் தீட்டிய நினைவோடு ஒரு பெண் காத்திருப்பாள் வெறும் ஒற்றைச் செய்தி அவளுக்கு சமாதானம் அல்ல.... அந்த குழந்தைகள், அந்தக் குரல் மங்கிய பெண், அவர்களின் அப்பா ஒரு சாகச வீரன் – என்று சொல்லிய புனைவை உண்மையாக்க தென்றல் ஒவ்வொன்றையும் கேட்டு காத்திருப்பார்கள்.... போர் முடியும், ஆம். ஆனால் காத்திருப்பவர்கள்... அவர்கள் வாழ்க்கை முடியும் வரை முடிவடைய மாட்டார்கள்....