tamilnadu

img

போர் ஒருநாள் முடியும் - -மதுகை சுதா-

போர் ஒருநாள் முடியும்

போர் ஒருநாள் முடிவடையும், தலைவர்கள் கைகுலுக்கிக் கொண்டிருப்பார்கள், கடந்து போன காலம் போல் இறந்து போன உயிர்களின் மேல்....  வயதான தாய் இறந்துபோன  மகனுக்காக தன் வாசல்படியில் எண்ணிக்கிடக்கும் நேரத்தோடு காத்திருப்பாள் – ஒவ்வொரு  தட்டுக்கும் ஒரு நம்பிக்கை..  காதல் கணவனை நெஞ்சில் தீட்டிய நினைவோடு ஒரு பெண் காத்திருப்பாள்  வெறும் ஒற்றைச் செய்தி அவளுக்கு சமாதானம் அல்ல....  அந்த குழந்தைகள், அந்தக் குரல் மங்கிய பெண், அவர்களின் அப்பா ஒரு சாகச வீரன் – என்று சொல்லிய புனைவை  உண்மையாக்க தென்றல் ஒவ்வொன்றையும் கேட்டு காத்திருப்பார்கள்....  போர் முடியும், ஆம். ஆனால் காத்திருப்பவர்கள்... அவர்கள் வாழ்க்கை முடியும் வரை முடிவடைய மாட்டார்கள்....