tamilnadu

img

முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்!

முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்!

வருகிறவர் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து பத்து பக்கங்களுக்கு மேல் வாசித்தால் அவருக்கு ரூபாய் 30 தள்ளுபடி தந்து, அசத்துகிறார் முடிதிருத்தும் கலைஞர் பொன் மாரியப்பன்!

வழக்கமான முடிதிருத்தகங்களில் காணப்படும் அரைகுறை ஆடைகளுடன் கூடிய நட்சத்திரப் படங்கள் மட்டுமல்ல வேறு  எந்த நட்சத்திரப் படங்களும் இந்தக் கடை யில் இல்லை. மாறாக, மரஅலமாரியில், புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க முடிதிருத்த வந்தோர் அமைதியாக அந்தப் புத்தகங்களை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.. தன் கடைக்கு வருபவர்களிடம் வாசிப்புப்  பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, கடைக்குள் சிறிய நூலகத்தை அமைத் துள்ளார் தூத்துக்குடி மில்லர்புரத்தில் ‘சுசில்குமார் பியூட்டி கேர்’ என்ற பெயரில் முடி திருத்தகம் நடத்தி வரும் பொன்.மாரி யப்பன். அதை முடிதிருத்தும் கடை என்பதை  விட மூளையைப் புதுப்பிக்கும் கடை என்று  தாராளமாகச் சொல்லலாம். வழக்கமாக முடிதிருத்தும் கடைக்குச் செல்கிறவர்கள் செய்தித்தாள்களை வாசிப்பதைத் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் பொன்மாரியப்பன் கடைக்குச் செல்  கிறவர்கள் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பதை கண்டிப்பாகக் காணலாம். பொன் மாரியப்பன்‌ கடைக்கு நாளி தழ்கள், வார இதழ்களும் வருகின்றன. அத்தோடு கதை, சிறுகதை, கவிதை, வர லாறு, இலக்கியம், ஆன்மிகம், நாவல்...  என சுமார் 400-க்கும் மேற்பட்ட புத்த கங்கள் மரஅலமாரியில் அடுக்கி வைக் கப்பட்டுள்ளன. முடிவெட்டுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில், புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்துப் படிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். பேச்சு, திரைப்படப் பாடல்கள் என எந்த சப்தமுமின்றி, முடி வெட்டும் கத்தரிக்கோல் சப்தம் மட்டுமே இங்கே கேட்கிறது. சின்ன வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வம் மாரியப்பனுக்கு உண்டு.  8-ஆம் வகுப்பு வரைக்கும் தான் படித்தி ருக்கிறார். சில ஆண்டுகள் ஒரு வக்கீலிடம் சிப்பந்தியாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு, அப்பா செய்து வந்த இந்த முடிதிருத்தும் தொழி லைத் தொடர கடை ஆரம்பித்தார். முடி வெட்ட ஆள் வராத நேரத்தில் புத்தகம் வாசிக்கத் தொடங்கி இருக்கிறார். இப்படி,  முழுமையாகப் படித்து முடித்த புத்த கங்களை அலமாரியில் அடுக்கி வைக்கத் துவங்கியிருக்கிறார். அது இன்று 400க்கும்  மேற்பட்ட ஒரு நூலகமாக உருவெடுத்தி ருக்கிறது. இந்தக் கடையைத் துவங்கி ஆறு வருஷம் ஆகிறது. “புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தணும், குறைந்தபட்சம் முடி வெட்ட வந்திருக்கும் நேரத்துலயாவது புத்த கங்களைப் படிக்க வைக்கணும்னு நினைச்சேன். தனியா புத்தக அலமாரி ஒண்ணு வாங்கி, அதுல என் கைவசம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் வரி சையா அடுக்கி வெச்சேன். முடிவெட்டக் காத்திருப்பவர்களிடம், பிடிச்ச புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொன்னேன். முதலில் தயக்கம் காட்டியவர்கள், பிறகு எடுத்து மேலோட்டமாகப் புரட்ட ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. செல்பேசி யில் மூழ்கிக் கிடக்கக் கூடாது, அடிக்கடி செல்பேசி பார்ப்பதால் ஏற்படும் தீமைகள். குறித்து நாளிதழ்களில் வெளியான தகவல்கள், கட்டுரைகளையும் அனைவ ரின் பார்வையில் படுற மாதிரி ஒட்டி  வச்சிருக்கேன்” என்கிறார் பொன்மாரி யப்பன். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரையில் இவருக்கு ’புத்தகர் விருது’ கொடுக்கப்பட்டிருக்கிறது. இவரது சேவையைப் பாராட்டி தூத்துக்குடியில் உள்ள பலரும் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனி மொழி இவரது கடைக்கு வந்து நூலகத்தைப்  பார்த்துப் பாராட்டியதுடன் 50 புத்தகங்களை அன்பளிப்பாகவும் வழங்கியிருக்கிறார். இப்போது கடைக்கு முடி வெட்ட வருகிறவர்கள் யாரும் செல்பேசி பார்ப்ப தில்லை. முடிவெட்டிய பிறகும் சில நிமி டங்கள் உட்கார்ந்து புத்தகத்தைப் படித்து விட்டு, பொறுமையாக வீட்டுக்குப் போகிற வர்களும் நிறைய உண்டு. முடிதிருத்தும் கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டு செல்லும் போதும், இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு  ரூபாய் கூட கட்டணத்தை உயர்த்திய தில்லை மாரியப்பன். இந்த ஆண்டு உயர்த்தச் சொல்லி மற்ற கடைக்காரர்கள் வற்புறுத்தியபோதிலும், 50 ரூபாயாக இருந்த கட்டணத்தை, 80 ரூபாயாக உயர்த்தி  அறிவித்திருக்கிறார், நீண்ட யோசனைக்குப் பிறகு. ஆனால் அதோடு புதிய அறிவிப்பு ஒன்றையும் பொன் மாரியப்பன் வெளி யிட்டுள்ளார். அதாவது வரும் ஜனவரி  ஒன்றாம் தேதி முதல் முடி வெட்டும் கட்டணம் ரூபாய் 80 ஆக உயர்த்தப்படுகிறது. முடி வெட்ட வருகிறவர்கள் இங்குள்ள ஏதாவது  ஒரு புத்தகத்தை எடுத்து பத்து பக்கங்க ளுக்கு மேல் வாசித்தால் அவருக்கு 30 ரூபாய்  கட்டணச் சலுகை வழங்கப்படும். இதுதான் அந்த அறிவிப்பு. “கட்டணத்தைக் கூட்டிச் சொல்லி, புத்தகம் வாசிச்சா 30 ரூபாய் குறைப்புன்னு சொல்றது... எப்படிப் பார்த்தாலும் அதே 50 ரூபாய் கட்டணம் தானே உனக்குக் கிடைக்குது” என்று மாரியப்பனிடம் மற்ற கடைக்காரர்கள் இப்போது கேட்கிறார்கள்.

-முகநூல் பதிவிலிருந்து...