கோழிக்கோட்டில் துவங்கியது எஸ்எப்ஐ அகில இந்திய மாநாடு ‘மதவெறி சக்திகளின் பொய் பிரச்சாரங்களுக்கு எதிராக மாணவர் இயக்கம் போராட வேண்டும்’
பத்திரிகையாளர் சசிக்குமார் அழைப்பு
பாலஸ்தீன ஒற்றுமை நகர் (கோழிக்கோடு) இந்திய மாணவர் சங்கத்தின் 18ஆவது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் பிரதிநிதி அமர்வை தொடங்கி வைத்து பத்திரிகையாளர் சசிகுமார் பேசுகை யில்,”வகுப்புவாத சக்திகளால் பரப்பப்படும் பொய் பிரச்சாரங்களைத் தடுக்க மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம் தேவை. சமூக ஊட கங்களை நம்பி வலதுசாரி சக்திகள் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துகின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் போலிச் செய்திகளும் தவறான தகவல்களும் பரவலாகப் பரப்பப்படு கின்றன. மோடி பிரதமரானதிலிருந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட நடத்த வில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இதையே செய்கிறார். கலாச்சார அடையா ளத்தை அழிக்கும் வகையில் பொய் பிரச்சாரம் பரப்பப்படுகிறது. அதை எதிர்கொள்ள டிஜிட்டல் ஊடகங்கள் ஒரு ஆயுதமாகப் பயன் படுத்தப்பட வேண்டும். எஸ்எப்ஐ உள்ளிட்ட இயக்கங்கள் இதில் முன்னணியில் இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களை அழிக்கும் நடவடிக்கையும் உள்ளது. இதற்கு ஆளுநர் கள் கூட பயன்படுத்தப்படுகிறார்கள். கட்டுக்கதைகளை வரலாற்றுமயமாக்குவதற் கான மையமாக அவர்கள் பல்கலைக்கழகங்க ளைப் பார்க்கிறார்கள். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதன் மூலம் தங்கள் எதிர்காலம் அழிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும். இந்துத்துவாவுக்கு எதிராகப் பேசினால், அது இந்து விரோதமாக சித்தரிக்கப்படுகிறது. இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் செயல் படுத்தும் கொள்கைகளுக்கு எதிராகப் போராடு கின்றன. துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் உள் ளிட்டவர்களால் அவ்வாறு செய்ய முடிய வில்லை. இருப்பினும், புதிய தலைமுறையி னரால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நிகழ்ச்சி நிரல்களை புரிந்துகொள்ள முடிகிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி களில் இடதுசாரி மாணவர் இயக்கங்களின் முன்னேற்றம், இடதுசாரிகள் தலைமையிலான போராட்டங்களின் முகமாக இளைஞர்களால் மாற முடியும் என்பதை பறைசாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.