tamilnadu

img

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் - விதிகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டில் உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமிப்பது தொடர்பான விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் 14 ஆயிரம் உள்ளாட்சி  அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான மசோதா, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.எமன்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் ஜூலை 1ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெற்றப்பட உள்ளன. 
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650 மாற்றுத்திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2,984 மாற்றுத்திறனாளிகளும் நியமிக்கப்பட உள்ளனர்
மேலும் உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமிப்பது தொடர்பான விதிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
1 விண்ணப்பிக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்குள் மாற்றுத்திறனாளிகள் வசிக்க வேண்டும்
2 விண்ணப்பத்துடன், குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
3 விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும். என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.