tamilnadu

img

சென்னை ஐஐடி பாலியல் விவகாரம் -மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

சென்னையில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்யும் ரோஷன் குமார் (22) என்ற வடமாநிலத்தை சேர்ந்த நபர், மாணவி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் ரோஷன் குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். 
இந்நிலையில் இந்த வழக்கினை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்துகிறது. மேலும் இந்த வழக்கை நியாயமாக விசாரிக்க வேண்டுமென தமிழ்நாடு காவல்துறைக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.