உயிர் சூழல் மண் டலத்தில் மிகப் பெரிய அங்கமாக நீலகிரி மாவட்டம் திகழ்வதால் ஆண்டுதோறும் பறவைகளின் வலசை காணப்படுகின்றன. நீல கிரி மாவட்டத்திற்கு ஆண்டுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வலசை வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கொடநாடு, சோலூர் மட்டம், கேத்ரின் நீர் வீழ்ச்சி, கிளன்மார்கன், கோத்த கிரி, பர்லியார், குன்னூர் ஆகிய பகுதிகள் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் பகுதிகளாக உள் ளன. தற்போது நீலகிரி மாவட்டத் திற்கு ரோஸி ஸ்டார்லிங் என்ற பறவை குளிர்கால பயணியாக வந்துள்ளது. இந்தப் பறவை ரோசா மைனா சோளபட்சி என்றும் அழைக் கப்படுகிறது. நாகன் வாய் புள் குருவியின் வகை யைச் சேர்ந்த சடர்னசு பறவைப் பேரி ணத்தை சான்றதாகும். இந்த பற வைகள் கூடு கட்டி வாழ்வதில்லை இருந்தாலும் ஆறு முதல் எட்டு முட் டைகள் வரை இடும் இந்த பறவை இனத்தில் ஆண், பெண் பறவைகள் இரண்டும் சேர்ந்தும் அடைகாக்கும் தன்மை கொண்டது. வெட்டுக்கிளி மற்றும் விவசாய பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை இவை சாப்பிடுவ தால் இந்த பறவைகளையும் விவ சாயிகளின் நண்பன் என்று அழைக் கிறார்கள். ஆண்டுதோறும் ரோஸி ஸ்டார்டிங் பறவைகள் கிழக்கு ஐரோப் பாவில் இருந்து தெற்காசியா முழு வதும் இடம் பெயர்கின்றன. குளிர் காலத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கின்றன. இந்த பறவை கள் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் குளிர்கால சுற்றுலா பய ணியாக இந்த பறவைகள் வந்து செல்கின்றனர். ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் தற்போது உதகைக்கு கூட்டம், கூட்டமாக படையெடுத் துள்ளது.
இதுகுறித்து பறவைகளை ஆவ ணப்படுத்தும் புகைப்பட கலைஞர் மதிமாறன் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் ஏராளமான வெளி நாட்டு பறவைகள் வருகை தருவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு உதகையில் நீர் பணியின் தாக்கம் அதிகரித்து மாலை மற்றும் அதி காலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் ஆசிய பறவை கள் ஆன ரோஸி ஸ்டார்லிங் பறவை கள் பனிக்காலத்தை அனுபவிக்க வந்துள்ளது. பறவை இனங்களின் வலசை பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பறவை இனங்களுக்கு ஏற்ற பழ வகைகள் நிறைந்துள்ளதால் குளிர் காலங்களில் ரோஸ் ஸ்டார்லிங் பற வைகளின் வருகை அதிகரித்து காணப் படும், என்றார். குறிப்பாக இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பின் இந்த பறவைகளின் வருகை அதிகரித் துள்ளதால் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
-சேக் அமீன், உதகை