சென்னை, மே 20- பொதுமக்களும், வணிகர்களும் பதற்றமின்றி 2000 ரூபாய் நோட்டுக் கள் மாற்றிக்கொள்ள காலஅவகாசம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச்செய லாளர் கோவிந்தராஜூலு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 7 ஆண்டுகளுக்கு முன் புழக்கத் தில் விடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை (மே 19) திடீரென அறிவித்திருக்கிறது. இதை சாமான்ய மக்களை மட்டுமன்றி சிறு, குறு, நடுத்தர வர்க்க வணிகர்களை பெரு மளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை ஒன்றிய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொள்ள வேண்டும். ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்த உடனேயே, சேமிப்பாக வைத்திருக் கக்கூடிய எளிமையான மக்களிட மிருந்து, வணிகர்களிடமே அன்றாட தேவைக்காக புழக்கத்திற்கு கொண்டுவரப்படும். இந்நிலையில் வணிகர்கள் அந்த நோட்டுக்களை வாங்க மறுக்கும் நிலை ஏற்படும். அதுபோன்ற நிலை ஏற்படும்போது பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் சர்ச்சைகள் ஏற்படும் நிலை உருவாகும். மேலும், சில்லரை வணிகர்களே 20,000 ரூபாய்க்கு மேல், வங்கிக்கு செலுத்த செல்லிம் போது அதை வங்கிகள் ஏற்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. இவற்றிற்கெல்லாம் விடைகா ணும் விதமாக, பொதுமக்களின் அன்றாட புழக்கத்திற்கும், வணிகர்க ளின் வங்கி பயன்பாட்டிற்கும், 2000 ரூபாய் நோட்டுக்களின் நிலையை ஒன்றிய அரசும், ரிசர்வ் வங்கியும் தெளிவுபடுத்த வேண்டும். ஏழை. எளிய, நடுத்தர மக்கள் தங்களிடம் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வணிக புழக்கத் திற்கு கொண்டுவந்து, அதனை மாற்றிக்கொள்வதற்கான எளிய நடைமுறைகளை, உரிய கால அவகா சத்துடன் தற்போது அறிவித்துள்ள 2023 செப்டம்பர் 30 என்பதை டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு அளித்தும், வணிகர்களும், பொதுமக்களும் வங்கிகளில் ரூ.60 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்து பொதுமக்களும் வணிகர்களும் பதற்றமின்றி 2000 ரூபாய் நோட்டுக் களை மாற்றிக்கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.