what-they-told

img

இரவில் மட்டும் பூக்கும் நிஷாகந்தி மலர்

உதகை, மே 8- குன்னூர் அருகே உள்ள ஒரு வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும். அதுவும் இர வில் மட்டும் பூத்துள்ள நிஷா கந்தி மலர் சுற்றுலா பயணி களை கவர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரிய வகை செடி,  கொடிகள், தாவர வகைகள் மற்றும் மரங்கள் அதிகமாக உள்ளன. சீசன் காலங்களில் அந்த  செடிகள், மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஜெகரண்டா, பிளேம் ஆப்  பாரஸ்ட், சேவல் கொண்டை மலர்கள், பொகைன் வில்லா, காட்டு டேலியா, காட்டு சூரிய காந்தி மலர்கள் பூத்து குலுங்கி  வருவது காண்போரின் மனதைக் கவர்ந்து வருகிறது. இந் நிலையில், குன்னூர் அருகே உள்ள பேரட்டி கிராமத்தைச் சேர்ந்த கங்கா என்பவரது வீட்டில் இதமான காலநிலை யில் வளரக்கூடிய ஆண்டுக்கு ஒரு முறை இரவு நேரத்தில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இந்த பூவை நிஷகாந்தி என்றும் அழைப்பார்கள். இது கள்ளி இனத்தைச் சேர்ந்த செடியாகும். வெண்ணிறம் கொண்ட இந்த மலரானது, மூன்று விதமான இதழ்களைக் கொண்டு அழகாக இருக்கும். கங்கா என்பவரது வீட்டில் வைத் துள்ள பிரம்ம கமலம் செடியில் நள்ளிரவில் பூத்த மலர் பல ரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.