திருவள்ளூர், ஜூலை 31 - திருவள்ளூர் மாவட்டம் திரு வேற்காட்டில் நர்சிங் மாணவி, விடுதி யில் தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே விடுதியுடன் கூடிய தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரியில்,ஈரோட்டைச் சேர்ந்த மாணவி விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு செவிலியர் பயிற்சிக்கு படித்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை (ஜூலை 30) அந்த மாணவி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். வழக்கம்போல், அனைத்து மாணவிகளும் உணவருந்த சென்றபோது, மேலே உள்ள அறைக்கு சென்ற மாணவி நீண்ட நேரம் திரும்பவில்லை.
இதைத் தொடர்ந்து மேலே சென்று பார்த்த போது, மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால், சக மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து திருவேற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். கல்லூரி நிர்வாகம், மற்றும் உடன் பயிலும் சக மாணவிகளிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி ஆவடி காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து சனிக்கிழமை முதலே தனியார் கல்லூரியில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.