ஈரோடு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாள ராகப் பணியாற்றி வரும் பெண். தனது மூன்றாவது பிரசவத்திற்கு மகப் பேறு விடுப்பு கேட்டிருந்தார். இதற்கு அனுமதி மறுக்கப்படவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடர்ந்த பெண், முதல் திரு மணத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றுள்ளார். அவரின் கணவர் 2004 ஏப்ரல் 7 இல் இறந்ததால், 2021-இல் இரண் டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இரட்டைக் குழந்தைகளு டன் கர்ப்பமாக இருந்தார். அவர் மகப்பேறு விடுப்புப் பலன் களுக்கு விண்ணப்பித்திருந்த போதி லும், பள்ளித் தலைமையாசிரியரும், மாவட்டக் கல்வி அதிகாரியும் அதை நிரா கரித்தனர். அரசு பணியில் சேர்வதற்கு முன்பே இரண்டு குழந்தைகளைப் பெற்ற தால், இதுவரையில் மகப்பேறு விடுப்பு எடுக்கவில்லை எனக்கூறி, தன்னுடைய மகப்பேறு சலுகைகளை வழங்குமாறு உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம், மூன்றாவது பிரசவத்திற்கு மகப் பேறு விடுப்பு மற்றும் சலுகைகள் வழங்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தது.