what-they-told

img

நீலகிரி: உச்சத்தில் காய்கறி விலை

உதகை, டிச.13- நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை எட்டியுள்ளது. மலை மாவட்டமான நீலகிரிக்கு கத்தரிக் காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், தக்காளி, வெங்காயம் போன்றவைகள் சம வெளி பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இச்சூழலில் தமிழ கத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த  2 மாதங்களாக பெய்த கனமழையால் விவ சாய பணிகள் கடுமையாக பாதித்தது. இது மட்டுமின்றி ஏற்கனவே பயிரிடப்பட்டிருந்த காய்கறிகளும் அழுகின. இதனால் காய்கறி  மகசூல் குறைந்து அவற்றின் விலை கடந்த  மாதத்தில் இருந்து உயர துவங்கியது.  அதேநேரம், சமவெளி பகுதிகளில் இருந்து நீலகிரிக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ள நிலையில், அவற்றின் விலை மேலும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக காய்கறிகள் விலை  தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ள னர்.

தற்போது உதகை மார்க்கெட்டில் கத்த ரிக்காய் கிலோ ரூ.120க்கும், வெண்டைக் காய் ரூ.100க்கும், முருங்கைக்காய் ரூ.400க்கும், தக்காளி ரூ.100க்கும், பெரிய வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.70க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, போன்றவைகளும் மழையால் பாதிக்கப்பட் டுள்ளன. இதனால் மார்க்கெட்டிற்கு முதல்  தர காய்கறிகள் குறைவாகவே வருகின்றன. அவையும் தரமின்றியே உள்ளன. மலை காய்கறிகளான கேரட் ரூ.60க்கும், பீட்ரூட்  ரூ.60க்கும், உருளைக்கிழங்கு ரூ.50க்கும்,  பீன்ஸ் ரூ.120க்கும், முள்ளங்கி ரூ.50க்கும்,  முட்டைக்கோஸ் ரூ.40க்கும் விற்பனையாகி வருகிறது. இதுவே கிராமப்புற கடைகளில் சற்று அதிகமான விலைக்கு விற்கப்படு கிறது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.