what-they-told

img

ஏர் கலப்பை எடுக்க வேண்டிய விவசாயிகள், தூக்கு கயிற்றை எடுப்பதா?

விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் தேசிய பங்களிப்பைக் கொண்டா டும் வகையில் பல்வேறு நாடுகளில் ஆண்டு தோறும் “விவசாயிகள் தினம்” அனுசரிக்கப் படுகிறது. இது உலகம் முழுவதும் வெவ் வேறு தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிச.23 ஆம் தேதியன்று “தேசிய விவசாயிகள் தினம்” கொண்டாடப்படுகிறது. இந்தியில்  “கிசான் திவாஸ்” என்றும் அழைக்கப்படு கிறது. இந்திய விவசாயிகளின் வாழ்க் கையை மேம்படுத்த பல கொள்கைகளை அறிமுகப்படுத்திய விவசாயிகளின் தலை வரும், இந்தியாவின் 5 ஆவது பிரதமருமான சௌத்ரி சரண் சிங்-கின் பிறந்தநாளை, தேசிய விவசாயிகள் தினமாக கொண்டா டப்படுகிறது.  ஸ்ரீசௌத்ரி சரண் சிங் 1902 ஆம் ஆண்டு  உத்தரபிரதேசம் மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள நூர்பூரில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். அவர் 28 ஜூலை 1979 முதல் 14 ஜன வரி 1980 வரை இந்தியாவின் ஐந்தாவது பிரதம ராக பணியாற்றினார். விவசாயக் குடும்பத் தில் இருந்து வந்த அவர், கிராமப்புற மற்றும்  விவசாய வளர்ச்சிக்கு ஆதரவாக செயல்பட் டார். இந்தியாவின் திட்டமிடலின் மையத்தில் விவசாயத்தை வைத்திருக்க அவர் தொடர்ச் சியான முயற்சிகளை மேற்கொண்டார். விவ சாயத்துறை மற்றும் விவசாயிகளின் நலனுக் கான பங்களிப்பை கருத்தில் கொண்டு, அவ ரது பிறந்த நாளான டிசம்பர் 23 ஆம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக அனுசரிக்கப் படுகிறது. இது பொதுவாக விவசாயிகளின்  பங்கு மற்றும் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு  பிரச்சாரங்கள் மற்றும் இயக்கங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் கொண்டாடப்படுகிறது.

அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை

 இந்தியா ஒரு வேளாண்மை நாடு. 60 சத விகித மக்கள் வேளாண்மையுடன் நேரடியா கவோ, மறைமுகமாகவோ சார்ந்து இருக்கி றார்கள். இந்தியாவில் வேளாண்மை பெரும் பாலும் பருவமழைகளையே சார்ந்திருப்ப தால், பருவமழை தவறுவது, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லாதது, இடைத்தரகர்களின் சுரண்டல் போன்ற காரணங்களால் உழ வர்களின் தற்கொலைகள் நாளுக்கு நாள்  தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக் கின்றன. இந்தியாவில் 1970களில் இருந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தேசிய பேரழிவாக குறிப்பிடப்படுகிறது. பெரும் பாலும் தனியார் நில உரிமையாளர்கள் மற் றும் வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமை ஆகியவை விவசாயி களின் தற்கொலைக்கு முக்கிய காரணங்க ளாகும். விவசாயிகள் யாரும் விரும்பி தற் கொலை செய்து கொள்ளவில்லை. அவர் களை தற்கொலைக்கு தள்ளுவதற்கு மேற் கண்ட காரணிகள் முக்கியமானவை.

அறிக்கைகளால் வேதனை
இதைத்தொடர்ந்து சியக் குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தற்கொலை தொடர் பான ஆய்வறிக்கையை கடந்த டிச.4 ஆம்  தேதியன்று வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கை யில், “நாடு முழுவதும் கடந்த 2022 ஆம் ஆண்டில் 1,70,924 தற்கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. முக்கியமாக கடந்த 2021 ஆம் ஆண்டைவிட 2022 ஆம் ஆண்டில் தற் கொலை 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தற் கொலை விகிதத்தில் விவசாயிகள் மற்றும்  கூலித்தொழிலாளர்களின் தற்கொலை மூன்றில் ஒரு பங்காக உள்ளது. விவசாயி களின் தற்கொலை 6.6 சதவிகிதமாகவும், தினக் கூலி தொழிலாளர்களின் தற்கொலை 26.4 சதவீதமாகவும், குடும்ப பெண்களின் தற் கொலை 14.8 சதவீதமாகவும் உள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை தொடர்பான என்சிஆர்பி அறிக் கையில், “கடந்த 2022 ஆம் ஆண்டில் நாடு  முழுவதும் 11,290 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 11,290 பேரில் 53  சதவிகிதம் (6,083) பேர் விவசாயத் தொழிலா ளர்கள் ஆவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டை ஒப் பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலை 3.7 சதவிகிதம் அதிகமாகியுள் ளது. 2021 ஆம் ஆண்டில் 10,281 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப் பிடத்தக்கது. இவ்வாறாக தற்போது வரை உள்ள மத்திய ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள்  அதிகரித்துள்ளது, ஆட்சியாளர்களின் இயலா மையை காட்டுகிறது. விவசாயிகளையும், விவ சாயத்தையும் காப்பாற்ற மத்திய அரசு எந்த  நடவடிக்கையும் எடுக்காமால், விவசாயிகளை போராட்டக்களத்திற்கு தள்ளியது தான் மத் திய ஆட்சியின் மிகப்பெரிய சாதனை. வேளாண் திருத்த சட்டத்தை தான்தோன்றித் தனமாக கொண்டு வந்து, விவசாயிகளையும், வேளாண்மையையும் கார்ப்பரேட் வசம் ஒப்ப டைத்து, அதன் மூலம் கொள்ளை லாபம் பெற  ஆட்சியாளர்கள் எண்ணினர். ஆனால், அதற்கு  விவசாயிகளில் ஏர்கலப்பை முட்டுக்கட்டை போட்டது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவ தும் விவசாயிகள் கோபாவேச போராட்டங் களில் ஈடுபட்டனர். குறிப்பாக, தலைநகர் தில் லியை ஓராண்டுக்கு மேலாக முற்றுகையிட்ட விவசாயிகள் தொடர் போராட்டங்கள் மூலம்  அச்சட்டத்தை திரும்பப்பெற வைத்தனர். இப்போராட்டம் இந்தியாவையே உலுக்கியது. மேலும், உலகம் முழுவதும் பெரும் பேசுபெரு ளானது மத்திய ஆட்சியாளர்கள் மற்றும் ஆதர வாளர்களுக்கு தலையில் இடி இறங்கியது போல ஆயிற்று என்றால் மிகையல்ல.

என்ன செய்ய போகிறோம்?
தற்போது இந்திய வேளாண்மை மிகவும் மோசமான சூழலில் உள்ளது. ஆனால், இதை நம்பி நாடு முழுவதும் ஏறத்தாழ 80 கோடி  மக்கள் உள்ளனர். மாநிலத்துக்கு மாநிலம் இது சற்று மாறக்கூடும். ஆக, உணவு உண்ணும் ஒவ்வொரு மனிதனும் விவசாயத்தின் முக்கி யத்துவத்தை உணர்ந்து, இனியாவது விவசா யிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண் டும். சமூக வலைதளங்களில் மட்டும் விவசா யத்தை காப்பற்ற வேண்டும் என பதிவு போட்டு விட்டு, இதனை கடந்துசெல்லும் மனிதர்க ளுக்கு உரத்து சொல்வோம். விவசாயத் தையும், விவசாயிகளையும் பாதுகாப்போம் என தேசிய விவசாயிகள் தினத்தில் உறுதி யேற்போம்போம்!

-எம்.சுவேதா