மும்பை, ஜூலை 21 - இந்தியாவில் மகப்பேறு காலத் தின்போது, தாய்மார்கள் இறக்கும் விகிதம் (MMR), ஐக்கிய நாடுகள் அவை நிலையான வளர்ச்சி இலக்குகளின் (UN Sustainable Development Goals -SDG) கீழ் நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக ஆய்வு களில் தெரியவந்துள்ளது. 2017 முதல் 2020-க்கு இடையி லான காலகட்டத்தில், இந்திய சுகா தாரம் மற்றும் குடும்ப நல அமைச்ச கத்தின் சுகாதார மேலாண்மை தக வல் அமைப்பு (Health Manage ment Information System -HMIS) பதிவுசெய்துள்ள 6.2 கோடி குழந்தை பிறப்புகள் மற்றும் 61,169 மகப் பேறு இறப்புகளை சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனத்தின் (ஐஐபிஎஸ்) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்திருந்தனர். அதன்முடிவுகள் தற்போது ‘பொது அறிவியல் நூலகத்தின்’ உலகளாவிய பொது சுகாதாரம் (PLOS Global Public Health) தொடர் பான அறிக்கையில் வெளியாகி யுள்ளது.
பேறுகாலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio - MMR) என்பது, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பிரசவத்திற்கு முன்னும், பின்னும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை யும் பாதுகாப்பையும் மேம்படுத்து வதற்கான கொள்கைகளை வகுப்ப தற்கான செயல்திறனாக பார்க்கப் படுகிறது. அந்த வகையில், ஐக்கிய நாடுகள் அவை நிர்ணயித்த இலக் கைக் காட்டிலும், இந்தியாவில் 70 சதவிகித மாவட்டங்களில் மகப் பேறு இறப்பு எண்ணிக்கை அதிகள வில் இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘‘2030-ஆம் ஆண்டிற்கு ஐ.நா. நிர்ணயித்துள்ள இலக்கு எழுப தாக உள்ளது. இந்நிலையில், இந்தி யாவில் மொத்தம் 640 மாவட்டங் களில் (2011 மக்கள் தொகைக் கணக் கெடுப்பு தரவின்படி) நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 448 மாவட்டங் களில் மகப்பேறு இறப்பு, 1 லட்சம் குழந்தைகளுக்கு 70-க்கும் அதிக மாக உள்ளது. அதிகபட்சமாக அரு ணாச்சல பிரதேசத்தில் 1 லட்சம் குழந்தை பிறப்புகளில் 284 தாய் மார்கள் மரணம் அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக மகாராஷ்டிரா வில் 40 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவில் மகப்பேறு இறப்பு ஆண்டுக்கு சராசரியாக 4.5 சத விகிதம் சரிந்து வந்தாலும், இது ஐ.நா. நிர்ணயித்த ஆண்டு இலக்கு விகிதம் 5.5 சதவிகிதத்தை விட குறைவாக உள்ளது. இந்தியாவின் சராசரி மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) தற்போது 113 ஆக உள்ளது. அருணாசல பிரதேசத்தைத் தொடர்ந்து மணிப்பூர் (282), அந்தமான் நிக்கோபர் தீவு (275), மேகாலயா (266), சிக்கிம் (228) ஆகிய மாநிலங்களின் மகப்பேறு இறப்பு விகிதம் 210-ஐ விட அதிக மான எண்ணிக்கை கொண்ட பிரி வில் இடம் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் ஐ.நா.வின் இலக்கை அடைவதற்கு உட னடி நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்றும், இதன் மூலம் சாத்தியமான தாய்மார்களின் இறப்புகளை தடுக்க வேண்டும் என் றும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.