கோவை, பிப்.19– கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர் தல் சனியன்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், பல்வேறு சுவாரஸ்யமான சம் பவங்கள் அரங்கேறின. கோவை இராமசாமி நகர் மேல்நிலைப் பள்ளியில், 70 வயதான மூதாட்டி ஒருவர் வாக்களிக்க வந்திருந்தார். ஆனால், அவ ரால் நடக்கமுடியாத நிலையில் உடனடி யாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அலுவலர்கள் அந்த மூதாட்டியை வீல் சேரில் அமர வைத்து வாக்கு செலுத்தும் மையத் திக்கு அழைத்து வந்தனர். பின்னர் மூதாட்டி யின் வாக்கு சீட்டு மற்றும் தேர்தல் ஆணை யத்தின் அடையாள அட்டைகளை பரிசோ தனை செய்த அதிகாரிகள், மூதாட்டியை வீல் சேரில் அமர வைத்தபடி வாக்களிக்க அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து வாக்கு மையத்திற்குள் சென்ற மூதாட்டி தனது வாக்கை செலுத்தினார்.
இரட்டையர்களால் குழப்பம்
இதேபோல், ஒரே மாதிரியான இரட்டை யர்களான நந்தகுமார் மற்றும் நிர்மல் குமார் ஆகிய சகோதரர்கள் வாக்களிக்க வந்தனர். ஆனால், இருவரும் ஒரே மாதிரி இருப்ப தால், தேர்தல் அதிகாரிகளுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதன்பின் அவர்கள் இருவரின் அடையாள அட்டைகளையும், தேர்தல் வாக்கு சீட்டுக்களையும் மீண்டும், மீண்டும் ஆய்வு செய்தனர். இதன்பின்னர், இருவரையும் ஒருவர்பின் ஒருவராக வாக்களிக்க அனுமதித்தனர்.
மகாத்மா காந்தி வேடத்தில்
கோவை மாவட்டம், உப்பிலிபாளையம் பேருந்து நிலையம் பகுதியில், மகாத்மா காந்தியை போன்று வேடமிட்ட முதியவர் ஒருவர், கைத்தடியை ஊன்றி சாலையில் செல்பவர்களிடம் இன்று தேர்தல் நடை பெற்று வருகின்றது. எத்தனை இடைவிடாத பணிகள் இருந்தாலும், அனைத்தையும் ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி வைத்துவிட்டு, இந் திய நாட்டின் குடிமகன் என்ற தனது அடையா ளத்தை அரசுக்கு பதிவு செய்திடுங்கள் என்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முதல் வாக்கை பதிவு செய்த இளைஞர்கள்
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க தகுதி பெற்ற இளை ஞர்கள் தங்களது வாக்குகளை ஆர்வத்து டன் செலுத்தினர். மேலும், முதன்முறையாக வாக்களிப்பது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளதாக மாணவி ஒருவர் தெரிவித்தார்.