கடலூர், ஜூலை 26- கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆயி யார் மடத்தை சேர்ந்த வர் கோபி-இளவரசி. இவர்களுக்கு இரண்டு மகள்கள். கோபி விருத்தாச்சலத்தில் செல் சர்வீஸ் சென்டர் கடை நடத்தி வரு கிறார். இரண்டாவது மகள் சிவகாமி, விருத்தாச்சலம் வடக்கு பெரியார் நகரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் திங்களன்று பள்ளிக்குச் சென்ற மாணவி சிவகாமி, மாதாந்திர தேர்வு எழுதி உள்ளார். தேர்வு எழுதிய பிறகு. வீட்டுக்கு வந்த சிவகாமி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படு கிறது. இந்நிலையில் இரவு 9 மணிக்கு, வீட்டில் உள்ள அறையில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெற்றோர் கள், தூக்கில் தொங்கிய மகளைக் கண்டதும் கதறி அழுது உள்ளனர்.
அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, மாணவியின் உடலை தூக்கு கயிற்றில் இருந்து கீழே இறக்கி உள்ளனர். பின்னர், மாணவியின் உடலை அடக்கம் செய்வதற்காக, பெற்றோர் கள் மற்றும் அவரது உறவினர்கள், பந்தல் அமைத்து இறுதிச்சடங்குகளை செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த விருத்தாச்சலம் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து இறுதி சடங்குக்காக வைக்கப் பட்டிருந்த மாணவியின் உடலை கைப் பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருத் தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயார் இளவரசி கூறுகை யில், சிவகாமி மிகவும் திறமைசாலி, கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்தாள், சரியாக படிக்க முடியவில்லை என்றார். ஆனாலும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதையும்? தற்கொலை செய்து கொண்ட மாணவி, இறப்பதற்கு முன்பு கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா? என காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.