what-they-told

img

செஸ் ஒலிம்பியாட் 2022 - இன்னும் 2 நாட்கள்

அனைவரும் சிறப்பு விருந்தினர்கள்

தொடக்க விழாவில் பங்கேற்க முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும், மாநில முதல்வர்களுக்கும் தமிழ்நாடு அரசு நேரடி மற்றும் தபால் மூலம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு  அரசு யாருக்கும் தனிப்பட்ட முறையில் சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கவில்லை. கலந்து கொள்ளும் மாநில முதல்வர்கள், அரசியல்  பிரமுகர்கள் என அனைவரும் சிறப்பு விருந்தினர் என்ற அடிப்படையில் நிகழ்வில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிப்பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டை பிரபலப்படுத்தும் வகையில் அரசு போக்குவரத்துக்கழகம், விரைவு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் செஸ் விளை யாட்டு தொடர்பான விளம்ப ரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனை பின்பற்றியுள்ள சில  தனியார் பள்ளி நிறுவனங்கள் செலவை பற்றி கவலைகொள்ளா மல் “இது நமது தமிழ்நாட்டின் திருவிழா” என்ற எண்ணத்தின் அடிப்படையில் பேருந்துகள் (ஸ்டிக்கர் விளம்பரம்), பள்ளிக்கு முன் பேனர்  என வைத்து செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்து அசத்தியுள்ளது.

எங்கு பார்த்தாலும் தம்பியின் சிலைகள்

தமிழ்நாட்டின் பாரம்பரிய உடை யான வேட்டி, சட்டை அணிந்த குதிரையை “தம்பி” என்ற பெயருடன் செஸ் ஒலிம்பியாட் தொடரின் சின்னமாக தமிழ்நாடு அரசு வடிவமைத்து ஒலிம்பிக் தொடர் ரேஞ்சில் வித்தியாசமான ஏற்பாடு களை செய்துள்ளது. இந்த “தம்பி” சின்னம் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பெரி தாக அரசு சார்பில் சிலையாக வைக்கப்பட்டு ள்ளது. இதனை பின்பற்றி தனியார் நிறுவன ங்களும் தங்களது சொந்த செலவில் தனது நிறுவனம், பள்ளி மற்றும் தங்கள் வீட்டின் அருகே தம்பியின் சிலையை வைத்துள்ள னர். தற்போதைய நிலையில் தமிழ்நாட்டின் நகரங்களில் எங்கு பார்த்தாலும் தம்பிதான் கம்பீரமாக நிற்கிறார்.