what-they-told

img

சதுரங்க திருவிழா: மாமல்லபுரம் விழாக்கோலம்!

விளையாட்டு உலகில் தடகளத்திற்கு ஒலிம்பிக்ஸ் எப்படியோ,  கால்பந்து ஹாக்கி, கிரிக்கெட்டுக்கு  உலகக்கோப்பைகள் எப்படி முக்கியமோ, அப்படித்தான் சதுரங்க விளையாட்டுக்கு செஸ் ஒலிம்பியாட். ஒலிம்பிக்கில் செஸ் போட்டிக்கு அனுமதி கிடையாது. இதனால் உருவானதுதான் செஸ் ஒலிம்பியாட். இந்தியாவில்  6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தோன்றிய சதுரங்க விளையாட்டில் இருந்து வளர்ச்சி பெற்றதுதான் இந்த செஸ். இங்கிருந்து தான் மேற்கு  ஐரோப்பாவுக்குச் சென்றது. அங்கிருந்து உலகம் முழுக்கப் பரவியது. இத்தகைய உலகப்புகழ் பெற்ற விளையாட்டுப் போட்டியை இந்தியாவில் முதல் முறையாக  நடத்தும் இடமான சென்னை, 382 ஆண்டுகள் பழமையான நகர மாகும். மிகவும் வளமான கலாச்சார பாரம்பரியம், வர லாற்றுப் பாரம்பரியமிக்க வங்காள விரிகுடாவின் கோர மண்டல் கடற்கரை அமைந்துள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்குவது சென்னை.

அது மட்டுமல்லாமல், ஐந்து முறை உலக சாம்பி யன் பட்டத்தை கைப்பற்றி முடி சூடா மன்னனாக திகழ்ந்த விஸ்வநாதன் ஆனந்தின் சொந்த நகரமும் சென்னை. உலகில் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 2013 ஆம் ஆண்டில் சகோதரத்துவ அடிப்படையில் சந்தித்த உலக செஸ் சாம்பியன் போட்டியை நடத்திய நகரமும் சென்னை தான். அதுதான் இந்தியாவின் சதுரங்க தலைநகரம்.  சதுரங்கம் விளையாட்டின் பிறப்பிடமான இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த வேண்டும் என்பது நீண்ட கால கனவு. அந்த கனவு கிட்டத்தட்ட 95 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவாகியுள்ளது. சென்னைக்கு தெற்கே 60 கிமீ தொலைவில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக மாமல்லபுரம் விளங்கு கின்றது. அதுமட்டுமல்ல, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமான மாமல்லபுரம் இப்போது 44ஆவது  செஸ் ஒலிம்பியாட்டை நடத்துகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக உலகின் 188 நாடுகளைச் சார்ந்த 189 ஆண்கள், 162 பெண்கள் பிரிவுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் மொழி, இனம், மதம், கலாச்சாரம், பண்பாடுகளை கடந்து மாமல்லபுரம் வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் “ஜேன்ஸ் உனா சுமஸ்” (நாங்கள் ஒரே குடும்பம்) என்கிற பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் நட்பின் கொண்டாட்டமாக  ஒரே இடத்தில் சங்கமித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல், ஐந்து முறை உலக சாம்பி யன் பட்டத்தை கைப்பற்றி முடி சூடா மன்னனாக திகழ்ந்த விஸ்வநாதன் ஆனந்தின் சொந்த நகரமும் சென்னை. உலகில் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 2013 ஆம் ஆண்டில் சகோதரத்துவ அடிப்படையில் சந்தித்த உலக செஸ் சாம்பியன் போட்டியை நடத்திய நகரமும் சென்னை தான். அதுதான் இந்தியாவின் சதுரங்க தலைநகரம்.  சதுரங்கம் விளையாட்டின் பிறப்பிடமான இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த வேண்டும் என்பது நீண்ட கால கனவு. அந்த கனவு கிட்டத்தட்ட 95 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவாகியுள்ளது. சென்னைக்கு தெற்கே 60 கிமீ தொலைவில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக மாமல்லபுரம் விளங்கு கின்றது. அதுமட்டுமல்ல, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமான மாமல்லபுரம் இப்போது 44ஆவது  செஸ் ஒலிம்பியாட்டை நடத்துகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக உலகின் 188 நாடுகளைச் சார்ந்த 189 ஆண்கள், 162 பெண்கள் பிரிவுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் மொழி, இனம், மதம், கலாச்சாரம், பண்பாடுகளை கடந்து மாமல்லபுரம் வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் “ஜேன்ஸ் உனா சுமஸ்” (நாங்கள் ஒரே குடும்பம்) என்கிற பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் நட்பின் கொண்டாட்டமாக  ஒரே இடத்தில் சங்கமித்துள்ளனர்.

போட்டியில் பங்கேற்க வருகை தந்த வீரர்கள், நடுவர்கள், விருந்தினர்கள் அனைவரையும் தமிழ்நாடு கலாச்சாரப்படி கதர் துண்டு அணிவித்து முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் வரவேற்று போட்டி நடைபெறும் மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வீட்டிலிருந்தே காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி Chess Olympiad, live chess, chess24.com ஆகிய இணையதளங்கள் வாயிலாக போட்டிகளை காணலாம். செஸ் ஒலிம்பியாட் மொபைல் ஆப் வாயிலாகவும் போட்டி யை காண ஏற்பாடு உள்ளது.  போட்டிகள் நடைபெறும் பூஞ்சேரிக்கு நேரடியாக வருகை தந்து ஆய்வு மேற்கொண்டு போட்டி சிறப்பாக  நடைபெற அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி யதன் மூலம் இந்திய சதுரங்கத்தை மேலும் உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பு செயலாளர் பாரத் சிங் சவுகானும் சர்வதேச செஸ் சம்மேளனத்தின் தலைவரும் பாராட்டு தெரிவித்திருப்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல நம்ம தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாகும். 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிகள் ஜூலை 28 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தொடக்க நிகழ்வில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும்,  வீரர்களின் அணி வகுப்பும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னையில் 22  ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படு கின்றனர்.  நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ள பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா  சாலை, காமராஜர் சாலை, கிண்டி பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள் முன்பு வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நகரில் யாரும் அனுமதியின்றி தங்கியிருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

- சி.ஸ்ரீராமுலு