what-they-told

img

கீழ் பவானி பிரதான வாய்க்காலில் உடைப்பு

திருப்பூர், ஜன.4- காங்கேயம் அருகே கீழ்பவானி பிரதான வாய்க்காலில் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. பொதுப்பணித்துறையினர் மண் மற் றும் மணல் மூட்டைகளை அடுக்கி அந்த உடைப்பை தற்காலிகமாக சரி செய்தனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து ஆயக்கட்டு பாச னத்துக்காக கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர்  மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சம் ஏக்கர் நிலங்களை நன்செய், புன் செய் பாசனம் என இரு பிரிவுகளாகப் பிரித்து தண்ணீர் திறக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நன் செய் பாசனத்துக்கு உட்பட்ட 13 ஆயி ரத்து 500 ஏக்கர் நிலப் பகுதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்கால் மண் வாய்க்காலாக இருப்பதால், பலமி ழந்த பகுதியில் அடிக்கடி வாய்க்கா லில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து விடு கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் தண் ணீர் திறக்கப்பட்ட பிறகு ஈரோடு மாவட்டத்தின் வழியாக செல்லும் வாய்க்காலில் 2 முறை உடைப்பு ஏற் பட்டு பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங் களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இறுதி யாக பெருந்துறை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு 15 நாட்கள் தண் ணீர் நிறுத்தம் செய்து பணிகள் முடி வடைந்து பின் தண்ணீர் திறக்கப் பட்டு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், திருப்பூர் மாவட் டம், காங்கேயம் அருகே உள்ள பாரதி புரம் பகுதியில் 102 மற்றும் 103  ஆவது மைல் பகுதியில் இரண்டு இடங்களில் திடீரென உடைப்பு ஏற் பட்டது. இதையடுத்து அப்பகுதி விவ சாயிகள் பொதுப்பணித் துறையின ருக்கு தகவல் அளித்ததன் பேரில்  உடைப்பு ஏற்பட்ட இடங்களுக்கு சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் மண் மற்றும் மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பை தற்காலிக மாக சரி செய்தனர்.