what-they-told

img

பறவைகள் கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

உடுமலை, பிப்.13-  திருப்பூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட சுமார் 19 குளங் களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.  தமிழகத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு  கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கடலோர பகுதியில் இந்த கணக்கெடுப்பு கடந்த மாதம் நடைபெற்றது. தற்பொழுது தமிழகத்தில் உள்ள ஏரி கள், குளங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் உள்ள குளங்க ளில் இந்த பறவைகள் கணக்கெடுப்பு 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற்றது.   இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் திருப் பூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட மருள்பட்டி குளம், பாப்பான் குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல் குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், திணை குளம், சின்ன ஆண்டிபாளையம் குளம், சாமளாபுரம் குளம், ராமி யம் பாளையம் குளம், சங்க மாங்குளம், சேவூர் குளம், செம் மாண்டம் பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், உப்பார் டேம் உள்ளிட்ட சுமார்  19 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.  இதில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வு தொண்டு  நிறுவனம் (Nature Society of Tiruppur) ரவீந்திரன் தலை மையிலான குழுவும் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங் கேற்றனர். ஞாயிறன்று காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்ற இந்த கணக்கெடுப்பு பயிற்சி யில் நீர்நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அரு கிலுள்ள உள்ள புதர்களில் உள்ள பறவைகள் போன்றவை கள் கணக்கெடுக்கப்பட்டது. இதில் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பறவைகள் என சுமார் 70 வகையான பறவைகள் கணக் கிடப்பட்டது.