சென்னை,மார்ச் 14- அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 22 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- ஏழை கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராவதற்குத் தேவையான விலையுயர்ந்த நீட் தேர்வு பயிற்சிகளை பெறுவது சாத்திய மில்லை என்பதையும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ சேர்க்கை தேர்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே, தன்னை போன்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற முடியும் என்பதையும் உணர்ந்து, நீட் தேர்வு கிராமப்புற மாண வர்களின் நலன்களுக்கு எதிரானது என அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார். நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, தீர்ப்பு வெளியான ஒன்பது நாட்களில் அனிதா 2017 செப்டம்பர் 1 அன்று தனது இன்னு யிரை மாய்த்துக் கொண்டார். அவரது மரணம் நீட் தேர்வு முறையின் கொடூரத்தை உலகுக்கு உணர்த்தியது.
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப் படையில் தலைமைச் செயலாளர் தலை மையில் அமைந்த அரசு செயலாளர் கள் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு, சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு மசோ தாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநரால் அம்மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. மீண்டும் அந்த மசோதா தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் வாயிலாக குடியரசுத் தலை வருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஒன்றிய பாஜக அரசு விரைவில் ஒப்புதல் தர வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகம் திறந்து வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த புதிய மருத்துவக் கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு, இம்மாவட்ட மக்களின் நலனிற்காக மார்ச் 14 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், நீட் எனும் தேர்வினை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் சட்டப் போராட்டம் நிகழ்த்தி, தனது இன்னுயிரை இழந்த அனிதாவின் நினைவாக அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், ரூ. 22 கோடியில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.