நாட்டிலேயே விவசாயிகளின் தற் கொலையில் முதலிடத்தில் உள்ள பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் கடந்த 10 மாதங்களில் 2,366 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அம்மாநிலத்தின் நிவார ணம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச் சர் அனில் பைதாஸ் பாட்டீல் சட்டமன்றத் தில் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனில் பைதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”2023 ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,366 விவசாயி கள் தற்கொலை செய்துகொண்டுள்ள னர். அதிகபட்சமாக அமராவதி வருவாய் கோட்டத்தில் 951 விவசாயிகளும், சத்ர பதி சம்பாஜிநகர் கோட்டத்தில் 877 பேரும், நாக்பூர் கோட்டத்தில் 257 பேரும், நாசிக் கோட்டத்தில் 254 பேரும், புனே கோட்டத் தில் 27 பேரும் தற்கொலை செய்துள்ள னர்” என கூறப்பட்டுள்ளது.