tamilnadu

img

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்! - ஒருவர் கைது

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த ரோஷன் குமார் (22) என்ற வடமாநிலத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள உணவகத்தில் வேலைபார்த்த ரோஷன் குமார், நேற்றிரவு அவ்வழியே நடந்து சென்ற மாணவி ஒருவரிடம், கட்டையைக் காட்டி மிரட்டி, அவரின் முடியைப் பிடித்து இழுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் இருந்து தப்பி சென்ற மாணவி காவலாளிகளிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து கோடூர்புரம் போலீசார் தகவல் அளிக்கப்பட்டது. மாணவியின் புகாரின் பேரில் ரோஷன் கைது செய்யப்பட்டுள்ளார். ரோஷனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.