விவசாய உபயோகத்திற்கான தண்ணீருக்கு வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
விவசாய பயன்பாட்டின்போது நீர் வீணாவதை தடுப்பதாற்காக, தண்ணீருக்கு வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். படேல் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு தேவையான அளவு நீர் வழங்கப்படும். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் நீரின் அளவின் அடிப்படையில் வரி விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும். இந்த திட்டத்திற்கு ரூ.1,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாவும், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் அசோக் கே. மீனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.