what-they-told

img

தர்ப்பூசணி விற்பனை அமோகம்

தஞ்சாவூர், பிப்.8- தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தர்ப்பூசணி பழங்கள் விற்பனை தொடங்கியது. ஆண்டுதோறும் வெயில் அதிகமிருக்கும் மார்ச் முதல் ஜூன் மாதம் வரையுள்ள நாள்களில் திண்டுக்கல், ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் அதிராம்பட்டினத்துக்கு தா்பூசணி பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். இதில் தற்போது கோடை காலம் ஆரம்பமாவதற்கு முன்னரே அனல் கக்கும் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள்  தர்ப்பூசணி பழங்களை விற்பனைக்காக அதிராம்பட்டினத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலை, வண்டிப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைத்து கொள்வதற்காக தர்ப்பூசணி பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.