what-they-told

img

கொரனோ அறிகுறியுடன் மும்பை மருத்துவமனையில் 2 பேர் அனுமதி

மும்பை, ஜன.24- சீனாவில் இருந்து மும்பை வந்த 2 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சீனாவில் கொரனோ வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. முதலில் உவான் நகரில் கண்டறி யப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலை நகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வரு கிறது.

உவான் நகரில் மருத்துவம் மற்றும் பிற படிப்புகளை படித்து வரும் 700 இந்திய மாணவர்கள் எச்ச ரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.   அவர்களில் பலர் விடு முறையை முன்னிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். பாதுகாப்பு நடவடிக்கையாக மும்பை சர்வதேச விமான நிலை யத்திற்கு சீனாவில் இருந்து வரும் பயணிகள் மருத்துவப்பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில்  பரிசோதனை செய்யப்பட்டதில் இரண்டு பேருக்கு  கொரனோ வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் மும்பை சின்ச்போகாலி பகுதியில் உள்ள தனியார் மருத்து வமனையில் தனி வார்டில் அனு மதிக்கப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.