சென்னை,அக்.12- இந்தியாவில் தேவாங்குகளுக்கான முதல் வனவிலங்கு சரணாலயம், தமிழகத்தின் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளது. தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சார்ந்தது. தங்கள் வாழ்நாளின் பெரும்பகு தியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக் கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிக ளுக்கு நன்மை பயக்கின்றன. இந்த இனங்கள் சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், தேவாங்கு இனத்தை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டுள்ளது. இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத் துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக் கான அச்சுறுத்தல்களைத் தணித்தல் ஆகி யவற்றின் மூலமே இவைகளின் எண்ணிக்கையைப் பெருக்க இயலும். அழிந்து வரும் இந்த தேவாங்குகள் இனத்தை பாதுகாப்பது என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப் பகுதிகள் தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப் பட்டுள்ளன.
இந்த இனத்தை உடனடியாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தமிழக அரசு, “இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப் படும்” என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள 11,806.56 ஹெக்டேர் (ஏழு பிளாக்குகளில்) பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலய மாக “கடவூர் தேவாங்கு சரணாலயம்” அமைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. வன உயிரினங்கள் பாதுகாப்பில், குறிப்பாக அழிந்து வரும் வன உயிரினங் களை பாதுகாப்பதற்காக மாநில அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, பாக் வளைகுடா வில் இந்தியாவின் முதல் கடல் பசு பாது காப்பகத்தை அறிவித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் கழுவேலி பறவைகள் சரணா லயம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அகத்தியர் மலை யானைகள் பாது காப்பகம், திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம், பதிமூன்று ஈர நிலப்பகுதிகளை ராம்சார் சாசனப் பகுதி கள் பட்டியலில் இடம் பெற செய்தது. இந்த அறிவிப்புகள் அனைத்திற்கும் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.