what-they-told

img

பதப்படுத்த பயன்படுத்தப்படும் உறைவிப்பான் தேவை அதிகரிப்பு

சென்னை, ஏப். 13- காய்கறிகள், பழங்கள், ஐஸ்கீரிம்  உள்ளிட்டவற்றை அதன் தட்பவெப்ப நிலை யில் பராமரிப்பதற்கான  உள்நாட்டிலேயே வடி வமைக்கப்பட்ட  டீப் பீரிசரை (உறை விப்பான்)  தேவை அதிகரித்துள்ளதாக ஏர் கண்டிஷனிங் மற்றும் வர்த்தக குளிர்பதன நிறுவனமான புளூ ஸ்டார்  தலைவர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் புதனன்று செய்தியாளர்க ளிடம் பேசிய அவர்,  மகாராஷ்டிரா மாநிலம் வாடாவில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி வசதியுடன் கூடிய புதிய ஆலை தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். இங்கு புதிய அளவிலான   உள்நாட்டிலேயே வடி வமைக்கப்பட்ட உறை விப்பான்கள் தயாரிப்படுகிறது என்று கூறினார். இவை 300 லிட்டர் முதல் 650 லிட்டர் வரை சேமிப்புத் திறன் கொண்டவை என்றும் நான்கு பக்கங்களிலிருந்தும் சமமான மற்றும் உகந்த குளிர்ச்சியை வழங்கும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது என்றும் அவர் தெரிவித்தார். புதிய ஆலையில் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் டீப் பீரிசர் மற்றும் 1,00,000  வாட்டர் கூலர்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.