weather

img

அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...

சென்னை:
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் 3.1 கி.மீ முதல் 4.5 கி.மீ  வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும்புதுவை, காரைக்கால், பகுதிகளில் ஒருசில இடங்களில்லேசானது முதல் மிதமானமழை பெய் யும், மற்றும் உள் மாவட்டங் களில் ஓரிருஇடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

டிச.30, டிச.31 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங் கள், புதுவை, காரைக்கால், பகுதிகளில் ஒருசில இடங் களில் மிதமான மழையும், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.ஜன.1, ஜன.2 தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங் கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.அடுத்த 48 மணி நேரத் திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.