தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளன.
இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் நேற்று வலுவிழந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு 50கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இதனால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
