technology

img

சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் 4-அவது முறையாக குறைப்பு!

சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் 4-அவது முறையாக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல்.

கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையைக் கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாக விண்கலத்தின் தூரம் குறைக்கப்பட்டு நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது தொலைவை 153 கிமீ x 163 கிமீ என்ற அளவில் உயரம் குறைக்கப்பட்டு நிலவின் அருகே சந்திரயான்-3 விண்கலம் சுற்றிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இன்று காலை 8.30 மணியளவில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து 7 நாட்களில் அதாவது வரும் 23ம் தேதியன்று சந்திரயானிலிருந்து ரோவர் பத்திரமாக நிலவில் தரையிறக்கப்படும்.

இது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் நிலவில் ரோவரை இறக்கிய நான்காவது நாடு என்கிற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.