science

img

AI தொழில்நுட்பத்தில் நோயளிகளுக்கு சிகிச்சை?

சென்னை மருத்துவமனைகளில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள 50% சுகாதாரத் துறை பணியாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள். AI தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், மருத்துவத் துறையிலும் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. விலைமதிப்பற்ற மனித உயிருக்கு சிகிச்சை அளிக்கவும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல நாடுகளில் AI தொழில்நுட்பத்தில் அனுபவம் இருக்கும் 426 சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் குளோபல் டேட்டா என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில் நோயாளிகளின் நோய் அறிகுறிகளைக் கண்டறிந்து என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் முடிவை எடுப்பதற்கும் ஈடுபடுத்தலாம் என்று 50 சதவீதத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

சுகாதாரத்துறையில், தற்போது நோயாளிகளின் தரவுகளைச் சேகரித்தல், மருத்துவத்துறை சார்ந்த ஆய்வு, நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் உள்ளிட்டவற்றில் மட்டுமே AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.