வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே 2வது முறையாக நிலஅதிர்வு உணரப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே 2-வது முறையாக இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த நில அதிர்வு குறித்து தகவலறிந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பேரணாம்பட்டு அருகே உள்ள கமலாபுரம், சிந்தக்கணவாய், கவராப்பேட்டை, டி.டி.மோட்டூர், பெரிய பள்ளம் ஆகிய 5 கிராமங்களில் கடந்த 3-ம் தேதி நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தெருவில் தஞ்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.