விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த சில மணிநேரம் ஆன பெண் குழந்தையை முட்புதருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் நன்னாடு கிராமத்தில் கோலியனூர் வாய்க்கால் பகுதியில் பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைதொடர்ந்து நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் குபேந்திரன் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.