districts

தனியார் மருத்துவமனை கழிவறையில் குழந்தை சடலம்

பொன்னேரி,ஏப்.4- சோழவரம் அருகே தனியார் மருத்துவமனை கழிவறை யில் இறந்த நிலையில் பச்சிளம் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. சோழவரத்தை அடுத்த அத்திப்பேடு சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அருகே தனியார் மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கழிவறையில் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இறந்த  நிலையில் கிடந்தது. தகவல் அறிந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை  கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் பெற்றோர் யார்? எப்படி  இறந்தது என்பது குறித்து கண்காணிப்பு கேமிராவின் உதவி யுடன்  விசாரணை நடைபெற்று வருகிறது.