tamilnadu

img

ரூ. 15 ஆயிரம் கோடியைப் பாதுகாப்பதே அவரது நோக்கம்... முஸ்லிம்களை தவறாக வழிநடத்துகிறார் ஓவைசி..... உருது கவிஞர் முன்னாவர் குற்றச்சாட்டு

லக்னோ:
பீகார் தேர்தலில் பாஜககூட்டணி வெற்றிபெறுவதற்கு, அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் ஒரு காரணமாகும்.

இந்த கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி,குஷ்வாகா-வின் ராஷ்ட்டிரியலோக் சமதா கட்சி ஆகியவற்றோடு இணைந்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பிரித்து விட்டது.குறிப்பாக, சீமாஞ்சல் பகுதியில், ஆர்ஜேடி கட்சிக்கு போகும் முஸ்லிம்களின் வாக்குகளை, இம்முறை தன் வசப்படுத்திக் கொண்டது. 5 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது.ஏற்கெனவே, மகாராஷ் டிர மாநிலத்திலும் இதேபோன்ற வேலையை ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி செய்தது.அங்கு, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதியோடு சேர்ந்துகொண்டு, காங்கிரஸ், என்சிபி கட்சிகளுக்கு போக வேண்டிய லட்சக்கணக்கான வாக்குகளை பிரித்தார். இதனால், பாஜக கூட்டணியே ஆதாயம் அடைந்தது. தற்போது மேற்குவங்கத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக அவர் அறிவித் துள்ளார்.

இந்நிலையில், “ஓவைசி பாஜக-வின் எடுபிடியாக செயல்படுகிறார்; முஸ்லிம் களை பிளவுபடுத்தி பாஜக-வுக்கு அரசியல் லாபம் பெற்றுத்தரும் வகையில் செயல்பட்டு வருகிறார்” என்றுஉருது கவிஞர் முன்னா வர்ராணா குற்றம் சாட்டியுள்ளார்.“மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தனது 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அசாதுதீன் ஓவைசியும், அவரது சகோதரர் அக்பருதீனும், அப்பாவி முஸ்லிம்களை தவறாக வழிநடத்திச் செல்கின்றனர்” என்று கூறியுள்ள ராணா, “ஓவைசி, பாஜக-வின் ஏஜெண்ட்” என்றும் கடுமையாக சாடியுள்ளார்.