tamilnadu

img

நெல் கொள்முதலில் தொடரும் குழப்பம்

திருவாரூர், ஜன. 24 - டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை பணிகள் மும்முரமாக அறு வடை இயந்திரம் மூலம் நடந்து வரு கிறது. இதையொட்டி நெல் கொள் முதல் நிலையங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். என இந்திய உணவு கழகம்  வாயிலாக ஒன்றிய அரசு உத்தர விட்டுள்ளது. இதனால் கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகள் உட்பட பல விவசாயிகள் பாதிக்கப்படு கின்றனர். அடிக்கடி ஏற்படும் மின்தடை, சர்வர், நெட்வொர்க் பிரச்ச னையால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆன்லைனில் பதிவு செய்ய கம்ப்யூட்டர் சென்டர்களி லும், கொள்முதல் நிலையங்களில் நெல்லைக் கொட்டிவைத்து வாரக் கணக்கில் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். இதை அறிந்த தமிழக உணவு அமைச்சர் அர.சக்கரபாணி, விவசாயி கள் விருப்பம்போல் ஆன்லைனில் பதிவு செய்தும் நெல்லை விற்க லாம், இல்லையேல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்தும்  நெல்லை விற்கலாம் என்று தெரி வித்தார். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் கொள்முதல்நிலையங்களில் நெல்லை விற்க செல்லும் விவசாயி களிடம் அங்கு பணிபுரியும் அலுவலர் கள், “ நிலையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று எங்களுக்கு இது வரை எந்த உத்தரவும் வரவில்லை. ஆன்லைனில் தான் கொள்முதல் செய்யப்படும்” என்று கூறுவதால் விவ சாயிகள் என்ன செய்வது என்று தெரி யாமல் கலக்கத்தில் காத்துக் கிடக்கின்றனர்.   எனவே தமிழக அரசு ஒன்றிய அரசுடன் கலந்து பேசி ஒரு தீர்க்க மான அறிவிப்பை உடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து நெல் கொள்முதலை விரைவாக நடத்த வேண்டும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  இதுபற்றி கொள்முதல் நிலைய அலுவலர்களிடம் கேட்டபோது, “எங்களுக்கு ஆன்லைனில் கொள்முதல் செய்ய மட்டுமே தெரி விக்கப்பட்டுள்ளது. வேறு எந்த உத்தர வும் வரவில்லை” என்று கூறுகின்றனர். எனவே ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை மாற்றி சிறுகுறு விவசாயிகளும் பாதிக்காமல், அலை க்கழிக்கப்படாமல் அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று விவசாயி கள் எதிர்பார்க்கின்றனர்.    

- ஆருரான்