tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு ‘தனி நிதியம்’: உதயநிதி ஸ்டாலின்

சென்னை,ஏப்.21- பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் வங்கிகள் மேலாண்மை சட்ட த்தின்கீழ் வருவதால் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த வங்கியும் கடன் தருவதில்லை. அதை நேர் செய்யும் வகையில் ‘தாட்கோ’ போல் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி நிதியம் உருவாக்கித் தரவேண்டும் என்று சட்டப் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கைவிடுத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று(ஏப்.21) சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “சிலர் பள்ளிப் பருவத்திலேயே தாங்கள் திருநங்கை என்பதை உணரத் தொடங்கிவிடுகின்றனர். ஆனால் தங்களின் நிலையை வீட்டிலும் சொல்ல முடியாமல், சக மாணவர்களிடமும் பகிர முடியாமல் தவிக்கிறார்கள். இதுபோன்ற சூழலில் கவுன்சிலிங் மூலம் நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. இதை ஆசிரியர்கள் உணர வேண்டும்” என்றார்.

தமிழகத்தில் திருநங்கைகள் நல வாரியத்தில் பதிவு செய்தால் மட்டுமே அரசின் நலத்திட்டங் களை பெற முடியும் என்ற சூழலில்  அனைத்துத் திருநங்கைகளையும் வாரியத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர் அனை வரையும் ஆதரவற்றவர்கள் என  கருதி அவர்களுக்கு மாத  உதவித் தொகையை வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மருத்துவம்-பொறியியல்-கலை அறிவியல் கல்வி நிலையங்கள் அனைத்திலும் தலா ஒரு இடம் திருநங்கைகள் இலவசமாக படிக்க ஒதுக்கித்தர வேண்டும். அரசு- தனியார் அலுவலகங்களிலும் கல்வித்  திறனுக்கேற்ற ஒரு பணியை ஒதுக்கி கொடுத்தால் வாழ்வாதா ரத்தை சுயமரியாதையுடன் அமைத்துக் கொள்ள உதவும். மேலும்,  தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள  கோவில்களில் திருநங்கையர்களை யும் பணியில் அமர்த்துவது குறித்தும் அரசு பரிசீலிக்குமாறு வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி கற்க 20க்கும் மேற்பட்ட சிறப்புப் பள்ளிகளை துறையே நடத்தி வருகிறது. அந்த பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்களை நிய மித்து, நவீன தொழில்நுட்ப வசதிகளு டன் தரம் உயர்த்தவேண்டும்.

40 சதவிகிதத்துக்கு மேல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளின் அனைத்துவித மான கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அனைத்து பகுதிகளிலும் பரவலாக உள்ளனர். இவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பிடத்தக்க விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.  மாற்றுத்திறநாளிகளுக்கு வழங்கப் பட்டு வரும் உதவித் தொகையை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ‘தாட்கோ’ போல் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று தனி நிதியம் உருவாக்கித்தரவேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஆணைய கத்துக்கு மாற்றுத்திறனாளி ஒருவரை  ஆணையராக நியமிக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதி யத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்கும் உத்தரவு கடந்த  10 ஆண்டுகளாக கிடப்பில் போடப பட்டுள்ளது. இதை நிதிநிலைக்கு ஏற்றவாறு படிப்படியாகவாவது நடை முறைப்படுத்த அரசு முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.