குர்மாஞ்சன் தாத்கா
(வரலாற்றுத் திரைப்படம் / கிர்கிஸ்தான் 2015 /
30 நிமிடங்கள்)
உலசின் பல சமூகங்களின் வரலாற்றில் பெண்கள் காத்திரமான பங்காற்றி யுள்ளனர். இனக்குழுத் தலைமையிலிருந்து தேசத் தலைமை வரை பெண்கள் ஏற்று திறம்படச் செய லாற்றியுள்ளனர். வீரம் என்ற பெயரில் போரை நேசித்த ஆண்களுக்கு மத்தியில் அமைதியை நேசித்த வீரமங்கையின் உண்மைக் கதை இப்படம். மத்திய ஆசியாவில் கி.பி. 800 களில் துவங்கி 1800கள் வரை ஆயிரம் ஆண்டுகள் கிர்க் என்ற ழைக்கப்படுகிற பல்வேறு இனக்குழுக்கள் “கிர்கிஸ் ககானட்” என்ற பெரு நிலப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். செங்கிஸ்கான போன்றவர் களின் படையெடுப்பு காரணமாக கிர்க் இன மக்கள் அவர்களின் நிலங்களிலிருந்து விரட்டி யடிக்கப்பட்டனர்; கொல்லப்பட்டனர். தொடர்ந்த படையெடுப்புகளினால் கி.பி. 1800 களில் அவர்கள் 40 இனங்கள் என்ற அளவில் சுருங்கிய தோடு தங்களுக்கிடையேயும் அவர்கள் கடுமை யாகப் போரிட்டு வந்தனர். எண்ணிக்கை மற்றும் நிலப்பரப்பு சுருங்கி வரவே கிர்க் இன மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி அவர்கள் ஒரே நாடாக மாற வேண்டுமென சில இனக்குழுக்களின் தலை வர்கள் விருப்பப்பட்டனர்.
அந்த இனக்குழு ஒன்றில், பெண்ணாகப் பிறந் தாலும் 10 ஆண்களுக்கு இணையானவள் என்று சோதிடனால் கணிக்கப்பட்டவள் குர்மாஞ்சன். பருவ வயதில் அலிம்பெக் என்ற இளைஞனைச் சந்திக்கிறாள். இனக்குழு அரசரால் நியமனம் பெற்ற அலாய் மலைப் பகுதிக்கான படைத் தளபதி (தாத்கா) ஆவான் அலிம்பெக். கிர்க் இனங்களின் ஒற்றுமையை விரும்புபவன் அவன். மதவாதிகள், ஒரு பெண்ணுக்கு கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனையை நிறைவேற்ற இருக்கையில் அலிம்பெக் தலையிட்டு அவள் தரப்பு நியாயத்தைக் கேட்டு அவளுக்கு விடு தலை வழங்குகிறான். இச்சம்பவத்தை நேரில் பார்க்கும் குர்மாஞ்சன் அவன்பால் ஈர்க்கப்படு கிறாள். விசயம் கேள்விப்படும் குர்மாஞ்சானின் தந்தை, அவள் இஸ்லாத்துக்கு எதிராகச் செயல்படுவ தாகக் கூறி, அவளைக் கட்டாயப்படுத்தி வேறொரு வனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். திருமணமாகிக் கணவன் வீடு செல்லும் ஒரு பெண் கணவனிடம், கணவன் வீட்டாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென அவர்கள் கலாச் சாரப்படி ஒரு பெண் பெருங்குரலெடுத்துப் பாடு கிறாள். பாடலின் பிற்பகுதி பெண்ணின் பிரிவைத் தாங்காத பிறந்த வீட்டாரின் ஒப்பாரியாக மாறு கிறது. பாடலின் ஊடாக நாமறியும் அம்மக்களின் பண்டையப் பண்பாடு வியப்பூட்டுகிறது. கணவன் வீட்டில் முதலிரவிலேயே ஏற்படும் பிரச்சனையினால் கணவனைத் தூக்கி எறிந்துவிட்டு தாய் வீடு திரும்புகிறாள் குர்மாஞ்சன். தந்தையின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அலிம்பெக்குக்கு கடிதம் அனுப்புகிறாள். அவன் வந்து அவளை அழைத்துச்சென்று திருமணமும் செய்து கொள்கிறான். குர்மாஞ்சனின் தம்பியை தன்னுடைய பாதுகாவலனாகவும் நியமிக்கிறான். அலிம்பெக் நிர்வாகத்தில் பெண்களின் உரி மையை நிலைநாட்டக் குரல்கொடுக்கிறாள் குர்மாஞ்சன்.
கிர்க் மக்களின் ஒற்றுமையை, ஒன்றுபட்ட அரசை விரும்பாத கோகன்ட் பகுதி தளபதி கான் தனது உதவியாளனின் ஆலோசனைப்படி அலிம் பெக்கைத் தந்திரமாகக் கொலை செய்கிறான். அலாய் மலைப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள படைகளை அனுப்புகிறான். இதனைக் கேள்வியுறும் குர்மாஞ்சன் தானே படைக்குத் தலைமை தாங்கி போரிடுகிறாள். கோகன்ட் படையை தோல்வியுறச் செய்கிறாள். விசயம் இனக்குழு அரசருக்குப் போகிறது. அரசர் கானைக் கண்டிக்கிறார். அலிம்பெக்கைக் கொன்றவனை கொல்லும்படி உத்தரவிடுகிறார். குர்மாஞ்சனையே அலாய் மலைப் பகுதியின் தளபதியாக நியமிக்கிறார். ஒரு பெண் இப்படித் தளபதியாக நியமிக்கப்படுவது அக்காலத்தில் அசாதாரணமானது. ஆண்டுகள் கழிகின்றன. கிர்க் இன மக்களின் ஒற்றுமை இன்னும் கனவாகவே இருக்கிறது. குர்மாஞ்சன் போரை விட அமைதியையே விரும்பு கிறாள். அவளது இரண்டு மகன்களும் இப்போது இளைஞர்களாகி விட்டார்கள். மூத்தவன் தந்தை யின் மரணத்துக்குப் பழி வாங்க வேண்டு மென்ற வெறியோடிருக்கிறான். கோகன்ட் மீது போர்தொடுத்து கோகன்ட் படைகளை அழித்தொழிக்கிறான். கோகன்ட் கொடியை வீழ்த்திக்கொண்டு வந்து தாயிடம் கொடுக்கிறான். “கொடி இரத்தம் தோய்ந்திருக்கிறது..” என்கிறாள் குர்மாஞ்சன். “இரத்தத்தில் தோயாத கொடியை உலகில் எங்கும் பார்க்க முடியாது..” என்கிறான் மகன். அச்சமயத்தில் கிர்கிஸ்தான் பகுதியை ஆக்கிரமிக்கும் பொருட்டு தனது படைகளை அனுப்ப முடிவு செய்கிறது ரஷ்யா. குர்மாஞ்சன் கட்டுப்பாட்டில் உள்ள அலாய் மலைப்பகுதிக்கு படைகள் வந்து சேர்கின்றன. ஆனால் குர்மாஞ் சான் போரை விரும்பவில்லை. மூத்தவன் படை களைத் திரட்டி ரஷ்யப் படைகளோடு மோது வதற்குத் தயாராகிறான். இளையவன் தாயை ஆதரிக்கிறான். குர்மாஞ்சன் ரஷ்ய ராணுவ அதிகாரிகளை அணுகி சமாதான ஒப்பந்தம் போடுகிறாள். இதனால் போர் தவிர்க்கப்படுகிறது. “மக்கள் அமைதியோடு வாழ்வதே தனது முன்னுரிமை” என்கிறாள் குர்மாஞ்சன்.
ஆனால் ரஷ்ய ராணுவத் தளபதி மாறியதும் நிலைமை மாறுகிறது. புதிதாக வந்த தளபதி அலாய் மலைப் பகுதியைச் சுற்றி வளைக்க உத்தர விடுகிறார். இதை மூத்தவன் தனது படைகளைக் கொண்டு எதிர்க்கிறான். ரஷ்ய வீரர்கள் அனை வரையும் கொல்கிறான். ஆனால் பழி இளைய வன் மீது விழுகிறது. புதிய ரஷ்யப் படைகள் வந்து இளையவனைக் கைது செய்கிறது. ராணுவ நீதிமன்றம் அவனுக்குத் தூக்குத்தண்டனை விதித்து தூக்கிலேற்றுகிறது. மூத்தவன் தம்பி யைத் தப்பிவிக்க அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்கிறான். ஆனால் தூக்கிலிடப் படும் இடத்திற்கு வரும் குர்மாஞ்சான் தூக்கு மேடையிலிருக்கும் தன் இளையை மகனைத் தப்பிக்க வேண்டாமென குறிப்பால் வேண்டு கிறாள். இளையவனும் தாயின் வேண்டுகோளின் படி மரணத்தை தழுவுகிறான். பிணத்தைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புகிறாள் குர்மாஞ்சன். ஒருவேளை இளையவன் தப்பித்துவிட்டால் நிச்சயம் ஒரு போர் நிகழும். ரஷ்யப்படைகள் மக்களைத் துவம்சம் செய்துவிடும். எனவே மகனைப் பலியிட்டு மக்களுக்கு அமைதியை உத்தரவாதப்படுத்துகிறாள் அந்தத் தாய். அதனாலேயே கிர்கிஸ்தான் நாட்டில் மிகவும் போற்றப்படுகிற பெண்ணாக இன்றைக்கும் இருக்கிறாள் குர்மாஞ்சன். அந்தக்காலத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள். கிர்கிஸ்தான் வரலாற்றில் அதிகச் செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம். சிறந்த அயல்நாட்டு திரைப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு கிர்கிஸ்தானி லிருந்து பரிந்துரை செய்யப்பட்ட படம்.