புதுதில்லி,மார்ச் 21- ஒன்றிய அரசு மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்க ளவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் வலி யுறுத்தினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற நடத்தை விதிகள் 377ஆவது பிரிவின்கீழ் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் பேசிய தாவது: ஒன்றிய அரசு முன்மொழியவிருக்கும் மக்கள் விரோத, 2021ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச்சட்டமுன்வடிவிற்கு என் உறுதியான எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன். இந்தச் சட்ட முன்வடிவின் நோக்கங்களும் இலக்குகளும், மின்சார விநியோகக் கட்டமைப்பினை முழுமையாகத் தனியார்மயமாக்க வசதி செய்து கொடுத்துள்ளது. 12 மாநிலங்கள் எதிர்ப்பைப் புறந்தள்ளுவதா? இந்தச் சட்டமுன் வடிவை பன்னிரண்டுக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடு மையாக எதிர்த்த போதிலும், ஒன்றிய அரசு, அவர்களின், எதிர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு சென்று கொண்டிருக்கிறது.
இந்தச்சட்டமுன்வடிவு அமல்படுத்தப் படுமேயானால், அது மின்சாரக் கட்டணங் களை நிர்ணயிப்பதில் மாநில அரசுகளுக்குள்ள சட்ட அதிகாரத்தை பறித்துவிடும். இலவச மின்சாரம் ஒழிக்கப்படும் விவசாய பம்ப் செட்டுகள், நெசவுத் தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு, தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் இலவச மின்சாரம் என்பது, சமூக அக்கறையில்லாத தனியார் கார்ப்பரேட்டுகளால் அளிக்கப்பட மாட்டாது. எதிர்வரும் ஆண்டுகளில், இந்த நன்மைகள் எல்லாம், தனியார் நிறுவனங் களால் ஒழிக்கப்பட்டுவிடும் என்ற அச்சமும் உள்ளது. மின்சாரத்திற்கான செலவு களும் பலமடங்கு அதிகரிக்கும். மேலும், 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவை கேள்விக் குறியாகிவிடும். எனவே, இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 246ஆவது விதியின்கீழ் மாநில அரசு களுக்கு அளிக்கப்பட்டுள்ள, சட்டமியற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ஒன்றிய அரசு, இந்த மின்சாரத் திருத்தச்சட்ட முன்வடிவைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார். (ந.நி.)