tamilnadu

வனப்பாதுகாவலர் மாற்றப்படுவாரா?

சென்னை, மார்ச் 12 - தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜை பணிமாற்றம் செய்யும் திட்டம் உள்ளதா என்பது  குறித்து விளக்க மளிக்க தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. காட்டு யானைகள் வேட்டையாடப் படுவதை தடுப்பது உள்ளிட்ட வன பாது காப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜை, அரசு ரப்பர் கழகத்துக்கு பணிமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. வனபாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்துக்கு உதவியாக சேகர்குமார் நீரஜ் இருந்து வருகிறார். அவரை பணி மாற்றம் செய்தால், பல வழக்குகளின் விசாரணை பாதிக்கப்படும் என்றார். இதுகுறித்து அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டபோது, சேகர்குமார் நீரஜை பணிமாற்ற திட்டம் உள்ளதா என்பது  தெரியாது என்றார். இதையடுத்து, சேகர்குமார் நீரஜை அரசு ரப்பர் கழகத்துக்கு பணிமாற்றம் செய்யும்  திட்டம் உள்ளதா என்பது குறித்து மார்ச் 15ஆம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.